எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் இந்து சமய அறநிலைத் துறை சார்பாக மாவட்டத்திலுள்ள சிறு சிறு திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்களை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் 420 திருக்கோயில் குருக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி தலைமையில் வழங்கி சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழா பேருரையாற்றினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா 2015-2016-ம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் விதி எண்.110-ன்கீழ் தமிழ்நாட்டில் கிராம புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வர்ழும் பகுதியில் அமைந்துள்ள பத்தாயிரம் சிறிய திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.இத்திட்டத்தின் கீழ 2015-2016-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 400 திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டது. இவ்நிதியாண்டில் தற்பொழுது 420 திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்களான தாம்பளம், கைமணி, தூபக்கால், கார்த்திகை விளக்கு, தொங்கு விளக்கு வழங்கப்பட்டுள்ளது.
பூஜை பொருட்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா இந்து சமய அறநிலைத்துறையின் மூலமாக கோயில்களில் அன்னதானம் திட்டத்தை கொண்டுவந்தார்கள். இத்திட்டத்தின் மூலமாக விழப்புரம் மாவட்டத்தில் 22 கோயில்களில் அன்னதானம் திட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது 2017-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி வட்டம், சித்தலூர் கிராமம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் புதியதாக சேர்க்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 1250 பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 திருக்கோயில்களுக்கு 13-வது நிதி உதவியின் மூலம் ரூ.2.91 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும், 2012 முதல் 2017 வரை விழுப்புரம் மாவட்ட கிராம புறங்களில் உள்ள 135 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட ரூ.82 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2017 வரை கிராமப்புற திருக்கோயில் திருப்பணிக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது 2016-2017-ம் நிதியாண்டில் இத்திருப்பணி நிதி உயர்த்தப்பட்டு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்பட உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 29 திருக்கோயில்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.29 இலட்சம் வழங்கப்பட உள்ளது.2011 முதல் 2017 வரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட 158 திருக்கோயில்களுக்கு ரூ.89 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள 18 திருத்தேர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் அரசு நிதியுதவி வழங்கப்பட்டு உபயதாரர்கள் பங்களிப்புடன் திருத்தேர் பழுது மற்றும் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஒரு கால பூஜை திட்டத்தை கொண்டு வந்தார்கள். இதனால் தினசரி ஒரு கால பூஜை சிறப்பாக இன்று வரை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கால பூஜை நிதியுதவித் திட்டத்தின் கீழ் இத்துறை ஆளுகையின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 588 திருக்கோயில்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் நிதியுதவி முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து வரப்பெறும் வட்டித் தொகை திருக்கோயில்களுக்கு தினசரி ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதலீடு தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.1 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் அம்மா இந்து அறநிலை சமயத்துறையின் மூலமாக திருக்கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டம், துறை நிலையான ஓய்வூதிய திட்டம், திருக்கோயில்களுக்கு அரசு நிதி மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் திருக்குடமுழுக்கு பணி போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்கள். இத்திட்டங்கள் அனைத்தையும் இவ்வரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சிசேவல் வெ.ஏழுமலை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் க.காமராஜ், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, விழுப்புரம் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு அவர்களும் மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.