எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் இந்து சமய அறநிலைத் துறை சார்பாக மாவட்டத்திலுள்ள சிறு சிறு திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்களை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் 420 திருக்கோயில் குருக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி தலைமையில் வழங்கி சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழா பேருரையாற்றினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா 2015-2016-ம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் விதி எண்.110-ன்கீழ் தமிழ்நாட்டில் கிராம புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வர்ழும் பகுதியில் அமைந்துள்ள பத்தாயிரம் சிறிய திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.இத்திட்டத்தின் கீழ 2015-2016-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 400 திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டது. இவ்நிதியாண்டில் தற்பொழுது 420 திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்களான தாம்பளம், கைமணி, தூபக்கால், கார்த்திகை விளக்கு, தொங்கு விளக்கு வழங்கப்பட்டுள்ளது.
பூஜை பொருட்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா இந்து சமய அறநிலைத்துறையின் மூலமாக கோயில்களில் அன்னதானம் திட்டத்தை கொண்டுவந்தார்கள். இத்திட்டத்தின் மூலமாக விழப்புரம் மாவட்டத்தில் 22 கோயில்களில் அன்னதானம் திட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது 2017-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி வட்டம், சித்தலூர் கிராமம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் புதியதாக சேர்க்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 1250 பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 திருக்கோயில்களுக்கு 13-வது நிதி உதவியின் மூலம் ரூ.2.91 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும், 2012 முதல் 2017 வரை விழுப்புரம் மாவட்ட கிராம புறங்களில் உள்ள 135 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட ரூ.82 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2017 வரை கிராமப்புற திருக்கோயில் திருப்பணிக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது 2016-2017-ம் நிதியாண்டில் இத்திருப்பணி நிதி உயர்த்தப்பட்டு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்பட உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 29 திருக்கோயில்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.29 இலட்சம் வழங்கப்பட உள்ளது.2011 முதல் 2017 வரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட 158 திருக்கோயில்களுக்கு ரூ.89 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள 18 திருத்தேர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் அரசு நிதியுதவி வழங்கப்பட்டு உபயதாரர்கள் பங்களிப்புடன் திருத்தேர் பழுது மற்றும் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஒரு கால பூஜை திட்டத்தை கொண்டு வந்தார்கள். இதனால் தினசரி ஒரு கால பூஜை சிறப்பாக இன்று வரை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கால பூஜை நிதியுதவித் திட்டத்தின் கீழ் இத்துறை ஆளுகையின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 588 திருக்கோயில்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வீதம் நிதியுதவி முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து வரப்பெறும் வட்டித் தொகை திருக்கோயில்களுக்கு தினசரி ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதலீடு தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.1 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் அம்மா இந்து அறநிலை சமயத்துறையின் மூலமாக திருக்கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டம், துறை நிலையான ஓய்வூதிய திட்டம், திருக்கோயில்களுக்கு அரசு நிதி மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் திருக்குடமுழுக்கு பணி போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்கள். இத்திட்டங்கள் அனைத்தையும் இவ்வரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சிசேவல் வெ.ஏழுமலை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் க.காமராஜ், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, விழுப்புரம் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு அவர்களும் மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.