முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: மதுரையில் ராட்சத பலூன்கள் தமிழக அமைச்சர்கள் பறக்க விட்டனர்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

மதுரை : எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி மதுரையில் நேற்று 3 இடங்களில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவம்பொறித்த ராட்சத பலூன்களை தமிழக அமைச்சர்கள் நேற்று பறக்கவிட்டனர். அ.தி.மு.க.நிறுவனர் எம்.ஜி.ஆரின் 100 - வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அரசு சார்பில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்ச்சியாக மதுரையில் வருகிற 30 - ம் தேதி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. மதுரை பாண்டிகோவில் அருகே அம்மா திடலில் நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார். 

         எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் பெரியார் பஸ்நிலையம், யானைக்கல், மாட்டுத்தாவணி ஆகிய 3 இடங்களில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவம் பொறித்த ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டது. மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார்,ஓ.எஸ்.மணியன், காமராஜ், அன்பழகன், பாஸ்கரன் ஆகியோர் ராட்சத பலூன்களை வானத்தில் பறக்கவிட்டனர்.

       இந்நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ், முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன்,மற்றும் நிர்வாகிகள் கு.திரவியம், எம்.எஸ்.பாண்டியன், புதூர்துரைப்பாண்டியன், சி.தங்கம், வில்லாபுரம் ஜெ.ராஜா, பரவை ராஜா, அண்ணாநகர் எம்.என்.முருகன், கே.ஜெயவேல், பைக்காரா கருப்புச்சாமி, வி.கே.எஸ்.மாரிச்சாமி, மா.ஜெயபால், ஏ.கே.முத்திருளாண்டி, செ.பூமிபாலகன், ஜி.என்.அன்புசெழியன், சோலை ராஜா, கிரம்மர் சுரேஷ், வழக்கறிஞர்கள் ரமேஷ், ஏ.பி.பாலசுப்பிரமணி, அசோகன், திருப்பதி மற்றும் நிலையூர் முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து