எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓட்டன்சத்திரம், - ஏழை மக்களுக்காக கொண்டாடப்படும் திருவிழா தான் ரமலான் என்று திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலை, எஸ்.ஏ.எம். யூசுப்;ராவுத்தர் திருமண மஹாலில் தமிழ்நாடு சிறுபாண்மை மக்கள் நலக்குழு சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மத நல்லிணக்க விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணை அமைப்பாளர் மூசா பேசியுள்ளார்.
இவ்விழாவிற்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஜெ.ஜபருல்லாகான் தலைமை வகித்தார். இவ்விழாவில் சி.முகம்மதுரபீக், என்.சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையம் சிறுபான்மை மக்கள் நலக்குழு எம்.ஏ.ஜின்னா வரவேற்று பேசினார். முன்னதாக இவ்வழாவில் நகர ஜமாத் தலைவர் எம்.ஒய்.பசிர் அகமது, செயலாளர் எம்.கே.சேக் அப்துல் காதர், தர்கா பள்ளி துணை தலைவர் எஸ்.ஏ.முகமது இப்ராகிம், பொருளாளர் எஸ்.கே.ஜின்னா, சத்திரப்பட்டி காந்தி சேவா சங்க நிறுவனர் மா.வன்னிக்காளை, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி, வடக்கு பள்ளி வாசல் தலைவர் எஸ்.ஏ.எம்.சகாபுதீன், செயலாளர் எம்.ஒய்.ரஹ்மான்சேட், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் வ.கல்யாணசுந்தரம், சத்திரப்பட்டி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மு.கருணாகரன், சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் எ.அரபு முகமது. ஒட்டன்சத்திரம் மருத்துவர் டாக்டர்.என்.கருப்பண்ணன், பொருளாளர் கே.சௌக்கத் அலி, சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் பி.கே.கருப்புச்சாமி, சிவமணி, வழக்கறிஞர் கே.சின்னக்கருப்பன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்எம்ஆர் நியூஸ் பப்ளிக்கேசன்ஸ் ஏஜென்சி எம்.சேக் முஜிபுர் ரஹ்மான் நன்றி கூறினார். இவ்விழாவில் கலந்து கொண்ட மூசா பேசியதாவது.
சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமைகளை பிற சமூகத்தினர் உதவி இல்லாமல் போராடி வெற்றி பெற முடியாது. அதனால் எங்கள் அமைப்பில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள். இஸ்லாமியர்கள் என அனைத்து மதத்தினரும் உள்ளனர். எல்லாவற்றுக்கு தீர்வை சொல்கிறது இஸ்லாம். ஜக்காத் என்பது தர்மம் மட்டுமல்ல செல்வ வரி என்பதாகும். ஒரு இஸ்லாமியர் தனது சொத்தில் இரண்டரை சதவீதம் தனது செல்வ வரியை கொடுக்க வேண்டும் என்கிறது. தொழுகை, நோன்பு, கலிமா, ஜக்காத். ஹஜ் யாத்திiரை ஆகிய 5 கடமைகளில் 4 கடமைகளை செய்தால் மற்றவர் பயன்பெற மாட்டார்கள். அதனால் தான் ஜக்காத்தை வலியுறுத்தி இந்த ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஜக்காத்தால் பிறர் பயனடைவார்கள். உலகில் தர்மம் செய்வதற்காகவே விழாவை நடத்துகிற மதம் இஸ்லாம். நாம் ஜக்காத்தை கொடுக்கிறோமா. ஒரு கோடிஸ்வரன் 2 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும். தனது சொந்த சகோதரன் ஏழையாக இருந்தால் அவனுக்கே கொடுக்கலாம். பிறகு மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த கடமைகள் 5ல் ஒரே ஒரு கடமையை பகிரங்கமாக சொன்னது இஸ்லாம். நீங்கள் தொழுவது அனைவருக்கும் தெரியும். ஹஜ்சுக்கு போவது தெரியும். இஸ்லாமிய மாதம் 12ல் 3 கடமையில் ஒரே மாதத்தில் செய்வது இந்த ரமலான் மாதத்தில் தான். இந்த வாய்ப்பு ரமலானில் மட்டும் தான் உள்ளது. ஆகவே அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். .ஏழைகளுக்கு செய்யும் ஜக்காத்தை அதாவது செல்வ வரியை நீங்கள் கொடுத்து உங்கள் செல்வத்தை தூய்மைப்படுத்துங்கள் என்கிறது இஸ்லாம் என்று மூசா பேசினார்.
கே.பாலபாரதி (சிபிஎம்)
எல்லா மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. வியர்வை உலருமுன் கூலியைக் கொடுக்க வேண்டும் என்று முகமது நபி சொல்லியிருக்கிறார். பிறப்பில் ஆண், பெண் பேதம் பார்க்கக்கூடாது என்றும் ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி என்றும் பேதம் பார்க்கக்கூடாது என்று அவர் வாழ்ந்த காலத்தில் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட கொள்கைகளைக்கொண்டது தான் இஸ்லாம் சமூகம் என்பதை நாங்கள் அறிவோம். சிறுபான்மை நலக்குழு கோரிக்கையின்படி தான் திண்டுக்கல்லில் திப்புசுல்தான் மணிமண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிக்கொடுத்தார். அந்த வகையில் சிறுபான்மை நலக்குழு அமைத்துக்கொடுத்துள்ள இந்த விழாவிற்கு வருகை தந்தவர்களை வருக வருக என வரவேற்பதில் பெருமைபடுகிறேன் என்று பாலபாரதி பேசினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிறுபான்மை மக்கள் நலக்குழு சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.