எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓட்டன்சத்திரம், - ஏழை மக்களுக்காக கொண்டாடப்படும் திருவிழா தான் ரமலான் என்று திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலை, எஸ்.ஏ.எம். யூசுப்;ராவுத்தர் திருமண மஹாலில் தமிழ்நாடு சிறுபாண்மை மக்கள் நலக்குழு சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மத நல்லிணக்க விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணை அமைப்பாளர் மூசா பேசியுள்ளார்.
இவ்விழாவிற்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஜெ.ஜபருல்லாகான் தலைமை வகித்தார். இவ்விழாவில் சி.முகம்மதுரபீக், என்.சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையம் சிறுபான்மை மக்கள் நலக்குழு எம்.ஏ.ஜின்னா வரவேற்று பேசினார். முன்னதாக இவ்வழாவில் நகர ஜமாத் தலைவர் எம்.ஒய்.பசிர் அகமது, செயலாளர் எம்.கே.சேக் அப்துல் காதர், தர்கா பள்ளி துணை தலைவர் எஸ்.ஏ.முகமது இப்ராகிம், பொருளாளர் எஸ்.கே.ஜின்னா, சத்திரப்பட்டி காந்தி சேவா சங்க நிறுவனர் மா.வன்னிக்காளை, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி, வடக்கு பள்ளி வாசல் தலைவர் எஸ்.ஏ.எம்.சகாபுதீன், செயலாளர் எம்.ஒய்.ரஹ்மான்சேட், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் வ.கல்யாணசுந்தரம், சத்திரப்பட்டி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மு.கருணாகரன், சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் எ.அரபு முகமது. ஒட்டன்சத்திரம் மருத்துவர் டாக்டர்.என்.கருப்பண்ணன், பொருளாளர் கே.சௌக்கத் அலி, சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் பி.கே.கருப்புச்சாமி, சிவமணி, வழக்கறிஞர் கே.சின்னக்கருப்பன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்எம்ஆர் நியூஸ் பப்ளிக்கேசன்ஸ் ஏஜென்சி எம்.சேக் முஜிபுர் ரஹ்மான் நன்றி கூறினார். இவ்விழாவில் கலந்து கொண்ட மூசா பேசியதாவது.
சிறுபான்மை மக்கள் தங்கள் உரிமைகளை பிற சமூகத்தினர் உதவி இல்லாமல் போராடி வெற்றி பெற முடியாது. அதனால் எங்கள் அமைப்பில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள். இஸ்லாமியர்கள் என அனைத்து மதத்தினரும் உள்ளனர். எல்லாவற்றுக்கு தீர்வை சொல்கிறது இஸ்லாம். ஜக்காத் என்பது தர்மம் மட்டுமல்ல செல்வ வரி என்பதாகும். ஒரு இஸ்லாமியர் தனது சொத்தில் இரண்டரை சதவீதம் தனது செல்வ வரியை கொடுக்க வேண்டும் என்கிறது. தொழுகை, நோன்பு, கலிமா, ஜக்காத். ஹஜ் யாத்திiரை ஆகிய 5 கடமைகளில் 4 கடமைகளை செய்தால் மற்றவர் பயன்பெற மாட்டார்கள். அதனால் தான் ஜக்காத்தை வலியுறுத்தி இந்த ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஜக்காத்தால் பிறர் பயனடைவார்கள். உலகில் தர்மம் செய்வதற்காகவே விழாவை நடத்துகிற மதம் இஸ்லாம். நாம் ஜக்காத்தை கொடுக்கிறோமா. ஒரு கோடிஸ்வரன் 2 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும். தனது சொந்த சகோதரன் ஏழையாக இருந்தால் அவனுக்கே கொடுக்கலாம். பிறகு மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த கடமைகள் 5ல் ஒரே ஒரு கடமையை பகிரங்கமாக சொன்னது இஸ்லாம். நீங்கள் தொழுவது அனைவருக்கும் தெரியும். ஹஜ்சுக்கு போவது தெரியும். இஸ்லாமிய மாதம் 12ல் 3 கடமையில் ஒரே மாதத்தில் செய்வது இந்த ரமலான் மாதத்தில் தான். இந்த வாய்ப்பு ரமலானில் மட்டும் தான் உள்ளது. ஆகவே அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். .ஏழைகளுக்கு செய்யும் ஜக்காத்தை அதாவது செல்வ வரியை நீங்கள் கொடுத்து உங்கள் செல்வத்தை தூய்மைப்படுத்துங்கள் என்கிறது இஸ்லாம் என்று மூசா பேசினார்.
கே.பாலபாரதி (சிபிஎம்)
எல்லா மதங்களும் அன்பை தான் போதிக்கின்றன. வியர்வை உலருமுன் கூலியைக் கொடுக்க வேண்டும் என்று முகமது நபி சொல்லியிருக்கிறார். பிறப்பில் ஆண், பெண் பேதம் பார்க்கக்கூடாது என்றும் ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி என்றும் பேதம் பார்க்கக்கூடாது என்று அவர் வாழ்ந்த காலத்தில் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட கொள்கைகளைக்கொண்டது தான் இஸ்லாம் சமூகம் என்பதை நாங்கள் அறிவோம். சிறுபான்மை நலக்குழு கோரிக்கையின்படி தான் திண்டுக்கல்லில் திப்புசுல்தான் மணிமண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிக்கொடுத்தார். அந்த வகையில் சிறுபான்மை நலக்குழு அமைத்துக்கொடுத்துள்ள இந்த விழாவிற்கு வருகை தந்தவர்களை வருக வருக என வரவேற்பதில் பெருமைபடுகிறேன் என்று பாலபாரதி பேசினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிறுபான்மை மக்கள் நலக்குழு சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.