முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி பழி தீர்க்கத் தொடங்கியது ஈரான்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

டெகரான் : ஈரான் நாட்டின் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் விதமாக சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் மீது, ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஈரான் நாடாளுமன்றம் மற்றும் வழிபாட்டு தலத்தில் கடந்த 7ம் தேதி மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து, ஈரானில் உள்ள ஷியா பிரிவினர் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும், இதேபோன்று சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ். அமைப்பு மிரட்டல் விடுத்தது.

இந்நிலையில், ஈரான், தங்கள் நாட்டின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் விதமாக சிரியாவில் உள்ள ஐ.எஸ்.நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஈரான் ஏவிய ஏவுகணைகள் ஆயிரத்து 200 கிலோமீட்டர் வரையில் சென்று தாக்கி அழிக்கும் ஜஹாப்-3 நடுத்தரமான ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், கடந்த 1988-ஆம் ஆண்டு ஈராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளை கொண்டு, தற்போது சிரியாவில் உள்ள டீர் இல் ஷோர்  பகுதியில் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகவும், பெருளவு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து