முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவ.மாணவிகளுக்கு ஒழுக்கம் மற்றும் போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு முகாம்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      கடலூர்
Image Unavailable

குறிஞ்சிப்பாடி எஸ் கே வி மேல்நிலை பள்ளியில் 6-முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர் மாணவிகளுக்கு ஒழுக்கம் மற்றும் போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.

 விழிப்புணர்வு முகாம்

முகாமில் குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் இராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து  விதிமுறைகளை பற்றியும் மாணவர் மாணவிகள் பள்ளியிலும் மற்றவர்களிடத்திலும் எவ்வாறு ஒழுக்கமாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை பற்றியும் மாணவர்  மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் பேசினார்.இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் ராஜீலு,ஆசிரியர் நவஜோதி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து