எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,0- மதுரையில் 30ம் தேதி நடைபெறும் நூற்றாண்டு விழா இந்தியாவே திரும்பிபார்க்கும் வகையில் மாபெரும் விழாவாக அமைய வேண்டும் என்று மதுரை மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூளுரை ஏற்று பேசினார்.
ஆலோசனை கூட்டம்
தமிழக அரசின் சார்பில் 32 வருவாய் மாவட்டங்கள் தோறும் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெறுவதையொட்டி அதன் தொடக்க விழா மதுரையில் வருகின்ற 30ம் தேதி நடைபெறுகிறது அதில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமா செல்லூர் கே.ராஜு தலைமை தாங்கினார். மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்திற்கு மாநில அவைத்தலைவரும், பள்ளிகல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.காமராஜ், கே.பி.அன்பழகன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் மருதராஜ், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.ராஜாங்கம், மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் புதூர் கே.துரைப்பாண்டி, சி.தங்கம், ஜெ.ராஜா, பகுதி செயலாளர்கள், ஏ.கே.முத்துஇருளாண்டி, வி.கே.எஸ்.மாரிச்சாமி, எம்.எஸ்.செந்தில்குமார், எம்.ஜெயபால், தளபதிமாரியப்பன், பி.எஸ்.கண்ணன், என்.முருகன், கே.ஜெயவேல், பூமிபாலகன், பைக்காரா பி.கருப்புசாமி, பரவை ராஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் எஸ்.டி.ஜெபாலன், கா.டேவிட்அண்ணாத்துரை, பெ.இந்திராணி, தமிழ்செல்வன், ரமணி, மாணிக்கம், ஜி.என்.அன்புசெழியன், மற்றும் கிரம்மர்சுரேஷ், சண்முகவள்ளி, சக்திமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் தான் முதன் முதலாக நடைபெறும் என்று கூறினார். அதன் படி மதுரையில் வருகின்ற 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது இதனை தொடர்ந்து 32 வருவாய் மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெறுகிறது மறைந்த முதல்வர் அம்மா எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை மதுரையில் நடத்த வேண்டும் என்று விரும்பினார். அம்மாவின் விருப்பத்திற்கிணங்க சிறப்பாக நடைபெறுகிறது இந்த நூற்றாண்டு விழா இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமையும் என்றார்.
அமைச்சர் காமராஜ் பேசியதாவது
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் என்றும் நிலையாக நிற்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அரசின் சார்பில் கொண்டாடப்படுகிறது இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பது அம்மாவின் லட்சியமாகும் 100 ஆண்டு காலம் அதிமுக மக்கள் பணி ஆற்றும் வகையில் இந்த பிறந்தநாள் விழா இருக்க வேண்டும் மதுரையில் வருகின்ற 30ம் தேதி நடைபெறும் நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஒரு முன்னோடி விழாவாக திகழ வேண்டும் என்று அவர் பேசினார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அரசின் சார்பில் வருகின்ற 30ம் தேதி ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக இருக்கும் இது போன்று யாருக்கும் நடைபெறாத வகையில் இந்த விழா சிறப்பாக அமைய வேண்டும் மேலும் அரசின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், சிறப்பாக நடைபெறுகிறது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்றை தினம்பரிசுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார் என்றார்.
அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது
அம்மாவின் எண்ணப்படி எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது அதன் தொடக்கமாக மதுரையில் வருகின்ற 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது அன்றைய தினம் அதிமுக தொண்டர்கள் தங்கள் குடும்ப சகிதமாக பங்கேற்று நம் தெய்வம் எம்ஜிஆருக்கு குடும்ப விழாவாக நாம் கொண்டாட வேண்டும் மதுரையில் நடைபெற்ற விழாவைப்போல் வேறு எங்கேயும் நடைபெறவில்லை என்ற வரலாற்றை நாம் பெற்றிட வேண்டும் என்று அவர் பேசினார்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் கடல் அலைபோல் திரண்டு இருப்பதை பார்த்து இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்பது போல் உள்ளது அம்மாவின் மருத்துவமனை செலவிற்காக அதிமுக சார்பில் ரூ.6 கோடி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் மக்கள் சக்தி என்றால் அம்மா மகா சக்தி ஆவார். எம்ஜிஆர் படத்திலும் சரி, அம்மா படத்திலும் சரி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை கூறி மக்களை நல்வழிப்படுத்தினார்கள் அதே போல் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் திண்டுக்கல் இருந்தது அப்போது திண்டுக்கல் இடைத்தேர்தலில்எம்ஜிஆர் மாயத்தேவரை களமிறக்கி மாபெரும் சரித்திரம் படைத்தார்.
எம்ஜிஆரும், அம்மாவும் மதுரை மக்களை என்றும் மறந்தது இல்லை அவர்கள் இருவரது அரசியல் வாழ்விலும் மதுரை இணைந்து தான் இருந்தது இந்த மதுரை மண்ணில் தான் எம்ஜிஆர், அம்மாவிற்கு செங்கோல் வழங்கினார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்தது தான் மதுரையாகும், மேலும் வெற்றி விழாவும் மதுரையில் தான் நடத்தப்பட்டது அதிமுகவிற்கும் மதுரைக்கும் பல்வேறு பெருமைகள் உண்டு ஏனென்றால் பல்வேறு காலகட்டங்களில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அதிமுகவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்துள்ளது.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மதுரையில் தான் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை மதுரையில் நடத்த அம்மா விரும்பினார்கள். தற்போது அம்மாவின் எண்ணப்படி எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை 32 வருவாய் மாவட்டங்கள் தோறும் நடைபெற உள்ளது அதன் முதல் தொடக்கவிழா அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம் மதுரையில் வருகின்ற 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது இந்த விழாவை இந்தியாவே எதிர்நோக்கிகொண்டிருக்கிறது இந்த விழாவை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நாம் சிறப்பாக கொண்டாட வேண்டும்
விதையை விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை எனவே அதிமுகவை யாரும் அசைக்க முடியாது அதிமுகவிற்கு எப்போதும் வெற்றிடம் இல்லை 100 ஆண்டுகள் ஆனாலும் நமக்கு தோல்வி என்பதே கிடையாது ஏனென்றால் அம்மாவின் ஆன்மா எப்போதும் நமக்கு உதவிசெய்துகொண்டே இருக்கும் என்று அவர் பேசினார்.
அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கூட்டம் ஒரு மாநாடு போல் உள்ளது இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் உள்ளனர் ஆனால் எம்ஜிஆருக்கும், அம்மாவிற்கும் உள்ள மக்கள் செல்வாக்கு யாருக்கும் கிடையாது 1967ல் காங்கிரஸ் கட்சி தமிழகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது அதே போல் 2011ல் தி.மு.க.தமிழகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி காங்கிரசும், தி.மு.க.வும் தமிழகத்தை ஆள முடியாது. அம்மா லட்சியம் கொண்ட இந்த இயக்கம் தான் இன்னும் 100 ஆண்டுகள் ஆளும்
பொதுவாக தலைவர்கள் மறைந்தால் அந்த இயக்கமும் மறையும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் 45 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த இயக்கத்தை உருவாக்கிய எம்ஜிஆர் மறைவிற்குப்பின்னும் இந்த இயக்கம் மக்கள் பணியை ஆற்றி வருகிறது அதே போல் அம்மாவின் மறைவிற்குப்பின் இந்த இயக்கம் மக்கள் பணி ஆற்றி வருகிறது ஏனென்றால் இந்த இயக்கத்திற்காக விதைத்த விதை தான் இன்று ஆலமரமாக வளர்ந்து மக்கள் பணி ஆற்றி வருகிறது அதற்கு காரணம் எம்ஜிஆரும், அம்மாவும் ஆகும்.
அதிமுகவை பற்றி பல்வேறு பத்திரிக்கைகள் விமர்சனம் செய்து செய்திகளை போட்டுவந்தனர் தற்போது அதிமுகவை பாராட்டி செய்திகள் போட்டு வருகின்றனர் ஏனென்றால் அதிமுக சார்பில் பிரமாணபத்திரங்கள் அதிக அளவில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அந்த பிரமாண பத்திரத்தை வைக்க இடமில்லாத வகையில் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் நிச்சயம் நமக்கு வரும் அது வெகு தொலைவில் இல்லை அது எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக அதிமுகவிற்கு கிடைக்க அம்மாவின் ஆத்மா நமக்கு நிச்சயம் உதவி செய்யும் .
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல் ஸ்டாலின் சட்டசபையில் விதிகளுக்கு புறம்பாக பல்வேறு கூச்சல் குழப்பங்களை செய்து வருகிறார். அதை மக்கள் நன்கு கவனித்துதான் வருகின்றனர் அதே போல் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலிலும் லஞ்சம் கொடுத்தோம் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க.வேட்பாளர் என்ன செய்தாரோ அதையேதான் நாங்களும் செய்தோம் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தோம், ஓட்டுகேட்டோம் வேறு எந்த குறுக்கு வழியில் நாங்கள் செல்லவில்லை அதில் வெற்றி கிடைக்கும் என்று தெரிந்து ஸ்டாலின் பல்வேறு அவதூறு செய்திகளை பரப்பினார்.
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மதுரையில் 30ம் தேதி சிறப்பாக நடைபெறுகிறது இதில் 5லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்கின்றனர் இந்த விழாவானது மதுரையில் மீண்டும் ஒரு சித்திரை திருவிழா போல் இருக்க வேண்டும் இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத வகையில் நமது தெய்வமாக இருக்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவானது ஒரு மாபெரும் சாதனை படைக்கும் விழாவாக இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.