முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா : கலெக்டர் சிவஞானம் வழங்கினார்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்.-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.1.87 இலட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்; சிவஞானம், வழங்கினார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்; அ.சிவஞானம், தெரிவித்ததாவது:
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.06.17) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
முன்னதாக பிற்படுத்தப்பட்;டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலமாக 41 பயனாளிகளுக்கு தலா ரூ.1 இலட்சத்து 86 ஆயிரத்தி 509 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், சாத்தூர் வட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் வசிக்கும் 21 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்;கினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் செந்தில் ஆறுமுகம், மாவட்ட பிற்படுத்தப்பட்;டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.பார்த்திபன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விஜயாம்பிகா, உதவி ஆணையர் (கலால்) சங்கரநாராயணன், தனித்துணை ஆட்சியர்(முத்திரை) உஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து