எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள ஆயிரத்து 1700 பணியிடங்கள் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும் என்றும் சட்டபேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
30 சதவீத மானியம்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி எரிசக்தித்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியிட்ட புதிய அறிவிப்புகளில், விவசாய பயன்பாட்டிற்கான சூரியமின் சக்தி நீர் பம்பு மாதிரி திட்டம் மாநிலம் முழுவதும் 5, 7.5 மற்றும் 10 குதிரைத்திறன் கொண்ட மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத 1000 எண்ணிக்கை சூரிய மின்சக்தி நீர் பம்புகள், தமிழக அரசின் 40 சதவீத மானியம், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையின் 20 சதவீத மானியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 30 சதவீத மானியம் மற்றும் விவசாயிகளின் பங்காக 10 சதவீதம் என்ற அடிப்படையில் இலவச விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்து, பதிவு மூப்பு பட்டியலில் இருந்து தங்களது விண்ணப்பதை நீக்கிக் கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் வேளாண்மை துறையுடன் ஒருங்கிணைந்து வழங்கப்படும்.
இலவச மின் இணைப்பு
விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் விரைவு மின்னிணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் 5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், 7.5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரமும், 10 குதிரைத்திறன் உள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சம் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்தும் 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு 6 மாத காலத்திற்குள் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.
பணி நியமனம்
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையினால் மாநிலத்திலேயே முதல்வகையான 500 மெகாவாட் திறன் கொண்ட சூரியபூங்கா ஒன்று தனியார் நிறுவனம் மூலம் நிறுவ உதவி செய்யப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2017 -18 ம் ஆண்டில் 300 உதவி பொறியாளர் மின்னியல், 25 உதவிப்பொறியாளர் சிவில், 300 தொழில் நுட்ப உதவியாளர் மின்னியல், 400 கள உதவியாளர், 250 இளநிலை உதவியாளர் (கணக்கு) மற்றும் 300 கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை பதவிகளுக்கான தகுதியான நபர்கள் வெளிப்படையான முறையில் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
மின்பகிர்மான கோட்டங்கள்
திருவள்ளுர் மற்றும் பல்லடத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மின்பகிர்மான வட்டங்கள் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். திருமழிசை, திட்டக்குடி மற்றும் ஆலங்குடியை தலைமையிடமாக கொண்டு ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் புதிய மின்பகிர்மான கோட்டங்கள் உருவாக்கப்படும். அந்தியூர் வட்டம் பர்கூரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் பகிர்மான பிரிவு அலுவலகம் உருவாக்கப்படும். கிண்டியில் ரூ.10 மதிப்பீட்டில் அலுவலர் குடியிருப்பு அமைக்கப்படும். கொரட்டூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படும்.
செல்போன் வழியாக ...
செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தற்பொழுது இயக்கத்தில் உள்ள 1912 தொலைபேசி வாயிலாக மின்தடை பழுது நீக்கும் சேவை ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டணம் இல்லா தொலைபேசி வசதியாக மாற்றப்படும். தமிழகத்தில் குறு,சிறு தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு 112 கிலோவோட் மின் தேவை வரையிலான புதிய மின்மாற்றி நிறுவ தேவைப்படாத புதிய தொழிற்சாலை மின் இணைப்புகளுக்கு 15 தினங்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.
ரூ.52 கோடி மதிப்பீட்டில் ....
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகில் வெளிப்பரப்பு உறைவி புதுப்பித்தல், அலகு 5 ல் தற்பொழுது உள்ள காலாவதியான கட்டுப்பாட்டு அமைப்புக்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவுதல், அலகு 4 தற்பொழுது உள்ள மறு சூடாக்கி அமைப்பை முழுவதுமாக நீக்கி புது மறு சூடாக்கி அமைத்தல் மற்றும் நிலக்கரி கையாளும் பணியை மேம்படுத்த 2 ஆயிரம் மெட்ரிக்டன கொள்ளவுடைய ஒரு இணைப்பு நிலக்கிரி கொணரும் அமைப்பு நிறுவுதல் ஆகிய பணிகள் ரூ.52 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
அம்மா பசுமை கிராமம்
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை வருடாந்திர அடிப்படையில் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து மின்சக்தியை பூர்த்தி செய்யும் விதமாக கிராமத்திலேயே கிடைக்கும் நிலையான பசுமை எரிசக்தி ஆதாரங்களை கொண்டு அம்மா பசுமை கிராமம் ஒன்று நிறுவப்படும். தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையினால் அதன் உள் மற்றும் வெளி பங்குதாரர்களை இலக்காக கொண்ட நிலையான ஆற்றல் அமைப்புகளின் சமூக பொருளாதார, நிதி ,நிர்வாக , தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு பகுதிகளுடன் தொடப்புடைய பாடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சி திட்டமான நிலையான எரிசக்தி பயிற்சி முன் முயற்சியை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.