முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.

இந்திய ஜனாதிபதியாக இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அவருக்கு பதிலாக புதிய ஜனாதி பதியை தேர்ந்து எடுக்க ஜூலை 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை பெயரை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பீகார் கவர்னராக இருந்த வந்த பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார். மேற்குவங்க கவர்னாராக இருக்கும் கேசரிநாத் திரிபாதி, கூடுதலாக பீகார் கவர்னாராக செயல்படுவார் என- குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து