முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஜனாதிபதி வாகனத்தையே நிறுத்திய டிராபிக் போலீசுக்கு பாராட்டு குவிகிறது : கடமையுணர்வுக்கு உயர் அதிகாரியும் சல்யூட்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு :  கர்நாடகாவில் ஆம்புலன்ஸ்  வாகனம் செல்வதற்காக  ஜனாதிபதி வாகனத்தையே  நிறுத்திய டிராபிக் போலீசுக்கு பாராட்டு குவிந்து வருகிறது .  மேலும்  நிஜலிங்கப்பாவின் கடமை உணர்ச்சியும், மனித நேயமும் ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளது என்று  உயர் அதிகாரி  பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபிதி பிரணாப் முகர்ஜி கடந்த 17-ம் தேதி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பெங்களூரு வந்தார். அப்போது அம்பேத்கர் வீதியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர் பாதுகாப்பு வாகனத்தில் ராஜ்பவன் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பிரணாப்பின் பாதுகாப்பு வாகனங்கள் டிரினிட்டி சதுக்கம் அருகே வந்த போது, எதிர் திசையில் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறியது.

இதைப் பார்த்த டிரினிட்டி சதுக்க போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் நிஜலிங்கப்பா பிரணாப் முகர்ஜியின் பாதுகாப்பு வாகனங்களைத் திடீரென நிறுத்தினார். உடனடியாக ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்லும் வகையில் வழி ஏற்படுத்திக் கொடுத்து, போக்குவரத்தைச் சீர் செய்தார். இதையடுத்து 3 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் ஜனாதிபிதி பிரணாப் முகர்ஜியின் வாகனங்களைக் கடந்து மருத்துவ மனைக்கு சென்றது.

நோயாளியின் உயிரைக் காக்கும் பொருட்டு, ஜனாதிபிதியின் பாதுகாப்பு வாகனங்களை நிறுத்திய நிஜலிங்கப்பாவுக்கு வாகன ஓட்டிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் பலர் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், நிஜலிங்கப்பாவின் கடமை உணர்ச் சியைப் பாராட்டி வாழ்த்தினர். இந்தச் செய்தி வைரலாகப் பரவியதால் நிஜலிங்கப்பாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இதையறிந்த கர்நாடக காவல் துறை அதிகாரிகள் நிஜலிங்கப்பாவுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். பெங்களூரு (கிழக்கு) போக்குவரத்து காவல் ஆணையர் அபிஷேக் கோயல் நிஜலிங்கப்பாவுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இதுபற்றி அபிஷேக் கோயல் கூறுகையில், 'ஒரு நோயாளியின் உயிரைக் காக்கும் பொருட்டு ஜனாதிபிதியின் வாகனத்தை நிறுத்தி, ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட போலீஸ் அதிகாரியை வணங்குகிறேன். நிஜலிங்கப்பாவின் கடமை உணர்ச்சியும், மனித நேயமும் ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து