முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எண்ணூர் துறைமுகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள எண்ணூரில் காமராஜர் துறைமுகம் லாபகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 12 பெரிய முக்கியத் துறைமுகங்களில் காமராஜர் துறைமுகம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

காரணம் இந்த துறைமுகத்தின் லாபத்தில் இருந்து குறிப்பிட்டத் தொகை மத்திய அரசுக்கு பங்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தனியாருக்கு படிப்படியாக தாரை வார்க்கும் முயற்சியை தற்போது மத்திய பா.ஜ.க. அரசு எடுக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்.

மத்திய அரசின் பங்கீட்டுடன் இயக்கப்படும் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் சென்னை துறைமுகம் தூசி சரக்குகளை   கையாள நீதிமன்றம் புறக்கணித்ததால் தற்போது அந்த சரக்குகள் காமராஜர் துறைமுகத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கையாளப்படுகிறது. குறிப்பாக சென்னையில் தயாரிக்கப்படும் கார்களில் பெரும்பாலானவை இந்த துறைமுகத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த வருடத்தில் மட்டும் இந்த துறைமுகத்தின் மூலம் 480 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இதற்கான பங்கீட்டுத் தொகை பங்குதாரர்களான மத்திய அரசுக்கும், சென்னை துறைமுகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. காமராஜர் துறைமுகத்துக்கு அருகே பல தனியார் துறைமுகங்கள் அமைந்தாலும் காமராஜர் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

இந்த வருடம் மட்டும் இத்துறைமுகத்தின் மூலம் 90 மில்லியன் டன் சரக்கு கையாளுவதற்கு திட்டமிடப்பட்டு செயல்படத் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஏற்கனவே இந்த துறைமுக வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடும், விரிவாக்கத்திற்காக நில ஒதுக்கீடும் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பா.ஜ.க. அரசு இத்துறைமுகத்தை தனியாருக்கு படிப்படியாக விற்க முடிவு செய்தால் இத்துறைமுகத்தின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய் கிடைக்காது. மேலும் இத்துறைமுகப் பணிகளில் உள்ள பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே மத்திய பா.ஜ.க. அரசு காமாராஜர் துறைமுகத்தை தனியாருக்கு படிப்படியாக தாரை வார்க்க எடுக்கும் முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தக்கூடிய நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.

மேலும் லாபத்தில் இயக்கப்படும் காமராஜர் துறைமுகத்தை எக்காரணத்திற்காகவும் அதன் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சி மேற்கொள்ளக்கூடாது என மத்திய பா.ஜ.க. அரசை த.மா.கா. வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக வாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து