எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததையடுத்து சுனில் கவாஸ்கர் இன்றைய தினம் இந்திய கிரிக்கெட்டின் துக்ககரமான தினம் என்று கூறியுள்ளார்.
‘நம்பர் ஒன்’ அணி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி உள்ளூரில் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 10-ல் வெற்றியும், 2-ல் டிராவும் கண்டது. ஒன்றில் மட்டுமே தோற்றது. அது மட்டுமின்றி டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ அரியணையிலும் ஏறியது. நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது
கருத்து வேறுபாடு
இதனால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகே அவருக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. களம் காணும் லெவன் அணியை தேர்வு செய்வது தொடர்பாக இருவருக்கும் ஒத்துவரவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி பயிற்சியின் போது கூட கோலியும், கும்பிளேவும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. மேலும் இந்திய மற்றும் உள்ளூர் வீரர்களுக்கு ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று கும்பிளே தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் நிர்வாக கமிட்டியை வலியுறுத்தினார். அவரது இந்த செயல் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிருப்திக்குள்ளாக்கியது.
இழுபறி நிலை
என்றாலும் கும்பிளேவின் தலைமையில் அணி நிறைய வெற்றிகளை குவித்து இருப்பதால், அவரை பயற்சியாளர் பதவியில் நீட்டிக்க சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி முயற்சித்தது. ஆனால் விராட் கோலி, கும்பிளேவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் இருந்து ஒரு அடி கூட இறங்கி வரவில்லை. சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், பயிற்சியாளர் நியமனம் விஷயத்தில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்தது.
ஒப்பந்த காலம் முடிவு
கும்பிளேவுக்கு நேற்று முன்தினத்துடன் ஓராண்டு ஒப்பந்த காலம் முடிவடைந்தது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கருத்தில் கொண்டு மேலும் 15 நாட்கள் அந்த பொறுப்பில் தொடரும்படி கிரிக்கெட் வாரியம் அவரை ஏற்கனவே கேட்டு இருந்தது. ஆனால் அதில் விருப்பம் இல்லை என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக நேற்று முன்தினம் லண்டனில் இருந்து பார்படோஸ் புறப்பட்டு சென்றது. அணியினருடன் அவர் செல்லவில்லை. ஐ.சி.சி. கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக லண்டனிலேயே இருந்து விட்டார்.
பதவியில் இருந்து ராஜினாமா
இந்த நிலையில் 46 வயதான கும்பிளே நேற்று முன்தினம் திடீரென பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். ராஜினாமா கடிதத்தை அவர் இந்திய கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது. பயிற்சியாளர் பொறுப்புக்கு ஷேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், டோட்டா கணேஷ், லால்சந்த் ராஜ்புத் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிடம் தெண்டுல்கர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும்.
சாதனை அளப்பரியது
இது குறித்து தனியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்த கவாஸ்கர் கூறியதாவது:-
ஓகே பாய்ஸ் இன்னிக்கு பயிற்சி வேண்டாம், லீவு எடுத்துக் கொள்ளுங்கள், ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறுபவர்தான் பயிற்சியாளராகத் தேவை என்கிறார்கள். கடந்த ஓராண்டாக தனக்கு இடப்பட்ட பணிகளை திறம்பட, கடினமாகச் செய்து நல்ல முடிவுகளை அளிப்பவர் உங்களுக்குத் தேவையில்லை அப்படித்தானே? எந்த வீரர் கும்ப்ளே மீது புகார் தெரிவித்தது, அப்படி யாராவது தெரிவித்திருந்தால் அந்த வீரர்தான் முதலில் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்.
நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இந்திய அணிக்காக ஒரு வீரராகவும் கடந்த ஓராண்டில் பயிற்சியாளராகவும் கும்ப்ளேயின் சாதனை அளப்பரியது. எனவே அவர் மீது களங்கம் கற்பிப்பது, அவரைப் பற்றி மோசமாகப் பேசுவது, அவர் ஹெட்மாஸ்டர் போல் நடந்து கொள்கிறார் கடினமாக வேலை வாங்குபவர் என்றெல்லாம் கூறுவதை என்னால் ஏற்க முடியாது.
மோசமான முன்னுதாரணம்
இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும், நாளைக்கு வரும் புதிய பயிற்சியாளர் வீரர்கள் சொல்பேச்சுக் கேட்டு நடக்க வேண்டுமா? அப்படி இல்லையெனில் அனில் கும்ப்ளேவுக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நேரும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுப்பது போல் அல்லவா இது இருக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். கோலிக்கும் இவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. எப்படிப்பார்த்தாலும் இந்திய கிரிக்கெட்டுக்கு இது துக்ககரமான நாள். இந்தியா உருவாக்கிய கிரேட்டஸ்ட் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே. இவரால் தனது பணியை செய்ய முடியவில்லை எனில் இது வருந்தத்தக்க துக்ககரமான நிலையே. அனில் கும்ப்ளே இடத்தைப் பூர்த்தி செய்யப்போவது யார் என்பது தெரியவில்லை, இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.