முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற ஏழைகளுக்கு மேலும் 1.27 லட்சம் வீடுகள்: மத்திய அரசு அனுமதி

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நகர்ப்புற ஏழைகளுக்கு மேலும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் வீடுகள் ரூ. 6,500 கோடி செலவில் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதில் மத்திய அரசின் நிதி ரூ. ஆயிரத்து 915 கோடியாகும்.
பிரதமரின் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் நகர்ப்புறத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மேலும் ரூ. 6 ஆயிரத்து 500 கோடி செலவில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதிலிருந்து இந்த அனுமதியையும் சேர்த்து மொத்தம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் எண்ணிக்கை 20 லட்சத்து 95 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில்தான் அதிக அளவுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்த அனுமதி ஒரு லட்சத்து 12 ஆயிரம் வீடுகளாகும். இதில்  70 ஆயிரத்து 784 வீடுகள் ரூ.3,528 கோடி முதலீட்டில்  கட்டப்பட்டுள்ளன.  இதில் மத்திய அரசின் நிதியுதவி ரூ. 1,068 கோடியாகும். ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை நிதி கொடுக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் 56,281 வீடுகள் ரூ. 2,950 கோடி முதலீட்டில் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் நிதியுதவி ரூ.844 கோடியாகும். அந்தமான் நிகோபர் தலைநகரான போர்ட் பிளேரில் முதன் முதலாக ரூ.54 கோடியில் 609 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து