முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து - பிரணித் - ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் பி.வி.சிந்து, பிரணித்,  ஸ்ரீகாந்த்  காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பி.வி.சிந்து தன்னை எதிர்த்த இந்தோனேஷிய ஓபன் சாம்பியனான சயாகா சட்டோவை (ஜப்பான்) சிந்து 21–17, 14–21, 21–18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சீனா வீரங்கனை சென் சியாசோனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

பிரணித் - ஸ்ரீகாந்த்

பிரணித் சீனாவின் ஹூவாங் யூஷியாங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் பிரணித் 21-15, 18-21, 21-13 என்ற புள்ளி கணக்கில் சீன வீரரை வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் ஸ்ரீகாந்த் உலகின் முதல் தர வீரரான தென்கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொண்டார். இப்போட்டியிலும் 15-21, 21-13, 21-13 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். கடந்த ஒரு வாரத்தில் சான் வான்-ஹோ இரண்டு முறை ஸ்ரீகாந்த்திடம் தோல்வி அடைந்துள்ளார்.

ஸ்ரீகாந்த் - சாய் பிரணித் மோதல்

கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன் தொடரின் அரையிறுதி போட்டியில் சான் வான்-ஹோவும் ஸ்ரீகாந்தும் மோதினர். இப்போட்டியில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அதோடு இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதை தொடர்ந்து நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் ஸ்ரீகாந்தும் சாய் பிரணித்தும் மோத உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து