முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா குடியிருந்த போயஸ் தோட்டத்தை கோயிலாக மாற்ற வேண்டும். நட்ராஜ்

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை ; போயஸ் தோட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குடியிருந்த கோயிலாக மாற்ற வேண்டும் என்று மயிலாப்பூர் தொகுதி அதிமுக உறுப்பினர் நட்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டசபையில் மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் டிஜிபியுமான நட்ராஜ் தொழில்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்று சட்டசபையில் அதிமுக உறுப்பினரும் முன்னாள் டிஜி.பியுமான நட்ராஜ் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டசபையில் தொழில்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தில் அவர் பேசுகையில் மயிலாப்பூர் திருக்கோயில்கள் நிறைந்த பகுதி, அதனை சுற்றுலா தளமாக்க வேண்டும. தீயணைப்புத்துறையில் பலர் பதவி உயர்வு இல்லாமல் உள்ளனர், காவல்துறையை போல் தீயணைப்புத்துறையினருக்கும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சட்டம் ஒழுங்கு குறித்து பலமுறை நான் ஆலோசனை நடத்தியுள்ளேன். அந்த போயஸ் தோட்டத்தை ஜெயலலிதா குடியிருந்த கோயிலாக மாற்ற வேண்டும். எனது தொகுதியான லஸ்சா்ச், கச்சேரி ரோடு ராயப்பேட்டை நெடுஞ்சாலை ஆகியவை போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளது. அந்த நெரிசலை போக்கும்வகையில் மேம்பாலம் ஒன்றை கட்டித்தரவேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதனால் தான் வெளிநாடுகளில் இருந்து தொழில் அதிபர்கள் பலர் முதலீடு செய்ய முன்வருகின்றனர். வெளிநாட்டு முதலீடுகள் குவிகின்றன. இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து