முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-ல் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும்: ஐ.நா அறிக்கையில் தகவல்

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

லண்டன், 2024-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

தொடர்ந்து உயரும் ...

தற்போது 760 கோடியாக இருக்கும் உலக மக்கள் தொகையானது 2030-ம் ஆண்டில் 860 கோடியாகவும், 2050-ம் ஆண்டில் 980 கோடியாகவும், 2100-ம் ஆண்டில் 1120 கோடியாகவும் உயரும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.கிட்டத்தட்ட 83 கோடி மக்கள் ஒவ்வொரு-ண்டும் உலக மக்கள் தொகையில் சேர்க்கப்படுவதால், மக்கள்தொகை அளவு அதிகரிப்பு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்கள் அவசியம்

பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களில் ஐ.நா. சபை வெளியிட்டுள்ள 2017க்கான திருத்தங்கள், எதிர்காலத்திற்கான உலகளாவிய மக்கள்தொகை அதிகரிப்புகள் மற்றும் எதிர்காலங்களின் விரிவான ஆய்வுகளை வழங்கி உள்ளது. புதிய நிலை வளர்ச்சிகளைஅடைவதற்கு நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை வழிகாட்டுவதற்கு இந்த தகவல்கள் அவசியம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவை முந்தும்...

சீனா (140 கோடி ன் மக்களுடன்) மற்றும் இந்தியா (130 கோடி மக்களுடனும்), உலகின் மொத்த மக்கள் தொகையில் 19% மற்றும் 18% மக்களை முறையே கொண்டுள்ளது. ஏறக்குறைய ஏழு-ண்டுகளில் அல்லது 2024-ம்-ண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

7-வது இடத்தில் நைஜீரியா

உலகம் முழுவதும் கணக்கிடுகையில் மக்கள் தொகையை கொண்டு கணக்கிடப்பட்ட பெரிய நாடுகளின் வரிசையில் நைஜீரியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் விளைவாக, தற்போது நைஜீரியாவின் மக்கள்தொகை 7-வது இடத்தில் உள்ளது, இது அமெரிக்காவை விட அதிகமாகும். இதனால் 2050-ம்-ண்டுக்கு முன்னர் உலகின் மூன்றாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக நைஜீரியா மாறிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து