முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதனையை நடத்தியது வட கொரியா

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

வட கொரியா, 5500 கி.மீ கடந்து தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகனை சோதனையில் வட கொரியா நடத்தியுள்ளது.

ஏவுகனை சோதனை

வட கொரியா மற்றொறு ஏவுகனை சோதனையை நடத்தியுள்ளது. இது கண்டம் விட்டு கண்டம் தாக்க நடத்தப்படும் சோதனை ஓட்டமாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் திடுக் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த ஏவுகனை 5500 கி.மீ கடந்து தாக்கக்கூடிய செயல் திறன் கொண்டது ஆகும். மேலும் 9000 கி.மீ கடந்து தாக்க கூடிய ஏவுகனையை வடிவமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா அழுத்தம் காரணமாக ...

வாஷிங்டனில் நடந்த உயர் மட்ட பேச்சுவார்த்தையில் வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள்  மீது அதிக பொருளாதார மற்றும் ராஜதந்திர அழுத்தங்களை சீனா மேற்கொள்ள அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தே வட கொரியா இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது என நம்பப்படுகிறது.

டிரம்ப் எச்சரிக்கை

ஏவுகனை தாக்குதலை தடுக்க அமெரிக்காவும் ஜப்பானும் இணைந்து  துரத்திச்சென்று தாக்கும் எஸ்.எம் - 3 பிளாக் ஐ.ஐ.எ சோதனையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளனர். இந்த மாதிரியான அச்சுறுத்தலில் வட கொரியா ஈடுபட்டால் பக்க விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து