முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா ஒபன் பேட்மிண்டன்: சக வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

சிட்னி, ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, சக வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்

காலிறுதியில் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் இந்தோனேஷிய ஓபன் பட்டத்தை வென்ற இந்தியாவின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீரரான சாய் பிரனீத் உடன் காலிறுதியில் ஸ்ரீகாந்த் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 25-23, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்த 5-வத முறை

ஸ்ரீகாந்த் கடைசியாக தான் விளையாடிய 5 தொடர்களிலும் காலிறுதி சுற்று வரை முன்னேறியுள்ளார். முன்னதாக, ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான சன் வான் ஹோவை (தென்கொரியா) ஸ்ரீகாந்த், 15-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து