எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நடத்திய ரகளை தொடர்பாக 7 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு 6 மாத தண்டனை வழங்க உரிமைக்குழு பரிந்துரை செய்தது. தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்ததன்பேரில் சபாநாயகர் தனபால், பெருந்தன்மையுடன் இந்த தண்டனையை வாபஸ் பெறலாம் என வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து சட்டசபையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீதான தண்டனையை வாபஸ் பெற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. சபாநாயகரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
உரிமைக்குழு அறிக்கை
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், உரிமைக் குழுவின் தலைவரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்கார், கே.எஸ்.மஸ்தான், கே.எஸ்.ரவிச்சந்திரன், என்.சுரேஷ் ராஜன், கார்த்திகேயன், பி.முருகன், கு.க.செல்வம் ஆகிய 7 பேர் மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்து அவை உரிமைக்குழு அறிக்கையை அளித்தார். அந்த அறிக்கையில் செய்திருந்த பரிந்துரைகளை சபை ஏற்றுக் கொள்வதற்காக தீர்மானத்தை அவை முன்னவரும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கொண்டு வந்தார்.
பாடமாக அமையும்
இதனையடுத்து சபாநாயகர் தனபால் பேசினார். அவர் பேசியதாவது:-
18-2-2017 அன்று நடைபெற்ற சம்பவங்களின்போது தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் நடந்துகொண்ட விதம் பேரவையினுடைய ஒட்டுமொத்த உரிமையை பாதிப்பதாகத் தெரிவித்து பி.வெற்றிவேல் ஓர் உரிமை மீறல் பிரச்னை குறித்த அறிவிப்பினைக் கொடுத்தார். அதுகுறித்து ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக உரிமைக் குழுவிற்கு அனுப்பினேன். வருங்காலத்தில் சுதந்திரமான முறையில் நாட்டு மக்களின் நன்மைக்காக, பேரவை விதிகளுக்குட்பட்டு, கண்ணியமான முறையில், எவ்வித அச்சுறுத்தலும் இன்றி உறுப்பினர்கள் பேரவையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்த ஏதுவாகவும், சட்டமன்றத்தில் பேரவைத் தலைவரின் ஜனநாயகக் கடமைகளை வன்முறை மூலமும், அச்சுறுத்தல் மூலமும், அடாவடியான நடவடிக்கை மூலமும் தடுத்துவிட முடியும் என்ற தவறான எண்ணத்தை விதைக்கக்கூடிய உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பிற உறுப்பினர்களுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டுமென்ற வகையிலும்,
உரிமைக் குழு பரிந்துரை
குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டும் அவை நடவடிக்கைகளுக்குப் பெரிதும் குந்தகம் விளைவித்த தி.மு.க உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார், கே.எஸ்.மஸ்தான், கே.எஸ்.ரவிச்சந்திரன், என்.சுரேஷ்ராஜன், க.கார்த்திகேயன், பி.முருகன், கு.க.செல்வம் ஆகியோர் ஆறு மாத காலத்திற்கு அவை நடவடிக்கைகளிலிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், இக்காலத்தில் இவ்வுறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தையும், எந்தவிதமான பிற ஆதாயங்களையும், சலுகைகளையும், தகுதிகளையும் பெற இயலாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவை உரிமைக் குழு பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரை நிறைவேற்றப்பெற வேண்டுமென்று இங்கே பேரவையின் சார்பாக பேரவை முன்னவர் தீர்மானத்தை மொழிந்துள்ளார்.
பேரவையே பாதுகாப்பு
தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு முன்னர் இந்தப் பிரச்னையில் முழுவதுமாக நான் பாதிக்கப்பட்டவன் என்ற முறையிலே ஒருசில கருத்துக்களை என்று சொல்ல மாட்டேன், ஒரு சில வேண்டுகோளை பேரவைமுன் வைக்க விரும்புகிறேன். பேரவைத் தலைவர் என்ற முறையிலே பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களும் என்னிடம் கோரிக்கை வைக்கிறீர்கள். இன்றைக்கு நான் உங்கள் அனைவரிடமும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். அவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவரே பாதுகாப்பு, பேரவைத் தலைவருக்கு இந்தப் பேரவையே பாதுகாப்பு என்ற முறையில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வை, தன்னுடையதாக ஏற்றுக்கொண்டு இந்தப் பேரவை நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளதற்கு என்னுடைய நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.
மன்னிப்புக்கடிதம்
மேற்காணும் 7 தி.முக. உறுப்பினர்களும் கடந்த 21.-6.-2017 அன்று என்னை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தை அளித்து, மன்னிப்பும் கோரியுள்ளதோடு வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் எனவும் உறுதிமொழி அளித்துள்ளனர்.
பேரவையினுடைய உரிமை பாதிக்கப்படக் கூடிய அளவில் 18-2-2017 அன்று பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் தி.மு.க. உறுப்பினர்களால் அரங்கேற்றப்பெற்றதைச் சுட்டிக்காட்டி, மேற்காணும் 7 தி.மு.க. உறுப்பினர்கள் அவை மீறிய செயலைச் செய்துள்ளதாகவும், அதற்கான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் எனவும் உரிமைக் குழு தனது அறிக்கையில் எடுத்துக்காட்டி, அதற்கான தண்டனையை பரிந்துரை செய்துள்ளது.
புதியவர்கள் என்பதால் ...
அதனை பேரவையும் ஏற்றுக்கொண்டு, நிறைவேற்ற முன்வந்துள்ள போதிலும், உறுப்பினர் சுரேஷ் ராஜனைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் இப்பேரவைக்கு புதியவர்கள் என்கிற காரணத்தாலும், மேற்காணும் 7 தி.மு.க. உறுப்பினர்களும் நேரில் வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்து, மன்னிப்பும் கோரி எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபட மாட்டோம் என அவர்கள் உறுதியளித்துள்ளதை ஏற்றுக்கொண்டும், இதுமாதிரி எதிர்காலத்தில் அவர்கள் நடக்க மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்போடும், பேரவை முன்னவர் முன்மொழிந்துள்ள தீர்மானத்தை பேரவையின் அனுமதியோடு திரும்பப்பெற்றுக் கொண்டு, அவை உரிமை மீறல் செயலைச் செய்த 7 தி.மு.க. உறுப்பினர்களை எச்சரித்து, பிரச்சினையை இத்தோடு விட்டுவிடலாம் என நான் கருதுகிறேன். இதனை பேரவை தயவுசெய்து பரிசீலனை செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.
தீர்மானம் நிறைவேறியது
இதனையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், உங்களது வேண்டுகோள் அல்ல; உங்களது உத்தரவு என எடுத்து கொண்டு நான் முன்மொழிந்த தீர்மானத்தை (7 பேருக்கும் தண்டனை வழங்கும் தீர்மானம்) திரும்ப பெறுகிறேன். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் வந்தவர் நீங்கள் (சபாநாயகர்). அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் நீங்கள். மனித நேயம், இரக்க குணம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்கள் உத்தரவை ஏற்று நான் முன்மொழிந்த தீர்மானத்தை திரும்ப பெற தீர்மானம் ஒன்றை முன்மொழிகிறேன் என்றார். இதனையடுத்து அந்த தீர்மானம் (தண்டனை வாபஸ்) குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.
மு.க.ஸ்டாலின் நன்றி
இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று நீங்கள் பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளீ ர்கள். தி.மு.க. சார்பில் பேரவை தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவை முன்னவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சம்பவம் நடந்த அன்று தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்திருந்தால் மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன் என்று அன்றைக்கே சொல்லியிருக்கிறேன். தங்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அபுபக்கர் ஆகியோரும் சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 1 min ago |
ஆப்பிள் பான் கேக்5 days 1 hour ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 3 days ago |
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.
-
சென்னையில் நடக்கவிருக்கும் சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. போட்டிக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றன
18 Mar 2024சென்னை : சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் தொடங்கியவுடன் விற்று தீர்ந்தன.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : மும்பை அணி புதிய கேப்டன் ஹர்திக் கருத்து
18 Mar 2024மும்பை : ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று மும்பை அணயின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 19-03-2024.
19 Mar 2024 -
சித்திரை திருவிழாவிற்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பந்தல் போடும் பணி துவக்கம்
19 Mar 2024மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ஜார்கண்ட் முன்னாள் முதல்வரின் உறவினர் பா.ஜ.க.வில் இணைந்தார்
19 Mar 2024ராஞ்சி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் மகன் துர்கா சோரனின் மனைவி சீதா சோரன் டெல்லியில் உள்ள பா.ஜ.க.
-
மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி இங்கிலாந்து தூதரகம் அறிக்கை
19 Mar 2024லண்டன், மன்னர் சார்லஸ் இறந்ததா வெளியான செய்தி வதந்தியே என்று இங்கிலாந்து தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
19 Mar 2024சென்னை : தமிழகம் புதுவையில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந
-
வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது: சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் தி.மு.க அழைப்பு
19 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
-
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி அறிவிப்பு
19 Mar 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.
-
மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப். 6-ம் தேதி வரை நீட்டிப்பு
19 Mar 2024புது டெல்லி, மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பிரேசிலில் சுட்டெரிக்கும் வெப்பம்: கடற்கரைகளில் தஞ்சம் அடையும் பொதுமக்கள்
19 Mar 2024ரியோ டி ஜெனிரோ, பிரேசிலில் கடும் வெப்பம் வாட்டி வதைப்பதால் உஷ்ணத்தை தணிக்க கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
-
டெல்லியில் அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு
19 Mar 2024புது டெல்லி, மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க.
-
தமிழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 Mar 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
19 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
-
ரபா மீது தாக்குதல் நடத்த திட்டம்: நெதன்யாகுவிடம் கவலை தெரிவித்த அதிபர் பைடன்
19 Mar 2024வாஷிங்டன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் ஜோபைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.
-
முடிவுக்கு வந்தது நெகட்டிவ் விகிதம்: 17 ஆண்டுகளுக்கு பின் வட்டி விகிதத்தை உயர்த்தி ஜப்பான் மத்திய வங்கி அறிவிப்பு
19 Mar 2024டோக்கியோ, எதிர்மறை வட்டி விகிதங்கள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்