எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நடத்திய ரகளை தொடர்பாக 7 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு 6 மாத தண்டனை வழங்க உரிமைக்குழு பரிந்துரை செய்தது. தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்ததன்பேரில் சபாநாயகர் தனபால், பெருந்தன்மையுடன் இந்த தண்டனையை வாபஸ் பெறலாம் என வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து சட்டசபையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீதான தண்டனையை வாபஸ் பெற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. சபாநாயகரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
உரிமைக்குழு அறிக்கை
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், உரிமைக் குழுவின் தலைவரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்கார், கே.எஸ்.மஸ்தான், கே.எஸ்.ரவிச்சந்திரன், என்.சுரேஷ் ராஜன், கார்த்திகேயன், பி.முருகன், கு.க.செல்வம் ஆகிய 7 பேர் மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்து அவை உரிமைக்குழு அறிக்கையை அளித்தார். அந்த அறிக்கையில் செய்திருந்த பரிந்துரைகளை சபை ஏற்றுக் கொள்வதற்காக தீர்மானத்தை அவை முன்னவரும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கொண்டு வந்தார்.
பாடமாக அமையும்
இதனையடுத்து சபாநாயகர் தனபால் பேசினார். அவர் பேசியதாவது:-
18-2-2017 அன்று நடைபெற்ற சம்பவங்களின்போது தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் நடந்துகொண்ட விதம் பேரவையினுடைய ஒட்டுமொத்த உரிமையை பாதிப்பதாகத் தெரிவித்து பி.வெற்றிவேல் ஓர் உரிமை மீறல் பிரச்னை குறித்த அறிவிப்பினைக் கொடுத்தார். அதுகுறித்து ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக உரிமைக் குழுவிற்கு அனுப்பினேன். வருங்காலத்தில் சுதந்திரமான முறையில் நாட்டு மக்களின் நன்மைக்காக, பேரவை விதிகளுக்குட்பட்டு, கண்ணியமான முறையில், எவ்வித அச்சுறுத்தலும் இன்றி உறுப்பினர்கள் பேரவையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்த ஏதுவாகவும், சட்டமன்றத்தில் பேரவைத் தலைவரின் ஜனநாயகக் கடமைகளை வன்முறை மூலமும், அச்சுறுத்தல் மூலமும், அடாவடியான நடவடிக்கை மூலமும் தடுத்துவிட முடியும் என்ற தவறான எண்ணத்தை விதைக்கக்கூடிய உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பிற உறுப்பினர்களுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டுமென்ற வகையிலும்,
உரிமைக் குழு பரிந்துரை
குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டும் அவை நடவடிக்கைகளுக்குப் பெரிதும் குந்தகம் விளைவித்த தி.மு.க உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார், கே.எஸ்.மஸ்தான், கே.எஸ்.ரவிச்சந்திரன், என்.சுரேஷ்ராஜன், க.கார்த்திகேயன், பி.முருகன், கு.க.செல்வம் ஆகியோர் ஆறு மாத காலத்திற்கு அவை நடவடிக்கைகளிலிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், இக்காலத்தில் இவ்வுறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தையும், எந்தவிதமான பிற ஆதாயங்களையும், சலுகைகளையும், தகுதிகளையும் பெற இயலாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவை உரிமைக் குழு பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரை நிறைவேற்றப்பெற வேண்டுமென்று இங்கே பேரவையின் சார்பாக பேரவை முன்னவர் தீர்மானத்தை மொழிந்துள்ளார்.
பேரவையே பாதுகாப்பு
தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு முன்னர் இந்தப் பிரச்னையில் முழுவதுமாக நான் பாதிக்கப்பட்டவன் என்ற முறையிலே ஒருசில கருத்துக்களை என்று சொல்ல மாட்டேன், ஒரு சில வேண்டுகோளை பேரவைமுன் வைக்க விரும்புகிறேன். பேரவைத் தலைவர் என்ற முறையிலே பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களும் என்னிடம் கோரிக்கை வைக்கிறீர்கள். இன்றைக்கு நான் உங்கள் அனைவரிடமும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். அவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவரே பாதுகாப்பு, பேரவைத் தலைவருக்கு இந்தப் பேரவையே பாதுகாப்பு என்ற முறையில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வை, தன்னுடையதாக ஏற்றுக்கொண்டு இந்தப் பேரவை நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளதற்கு என்னுடைய நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.
மன்னிப்புக்கடிதம்
மேற்காணும் 7 தி.முக. உறுப்பினர்களும் கடந்த 21.-6.-2017 அன்று என்னை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தை அளித்து, மன்னிப்பும் கோரியுள்ளதோடு வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் எனவும் உறுதிமொழி அளித்துள்ளனர்.
பேரவையினுடைய உரிமை பாதிக்கப்படக் கூடிய அளவில் 18-2-2017 அன்று பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் தி.மு.க. உறுப்பினர்களால் அரங்கேற்றப்பெற்றதைச் சுட்டிக்காட்டி, மேற்காணும் 7 தி.மு.க. உறுப்பினர்கள் அவை மீறிய செயலைச் செய்துள்ளதாகவும், அதற்கான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் எனவும் உரிமைக் குழு தனது அறிக்கையில் எடுத்துக்காட்டி, அதற்கான தண்டனையை பரிந்துரை செய்துள்ளது.
புதியவர்கள் என்பதால் ...
அதனை பேரவையும் ஏற்றுக்கொண்டு, நிறைவேற்ற முன்வந்துள்ள போதிலும், உறுப்பினர் சுரேஷ் ராஜனைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் இப்பேரவைக்கு புதியவர்கள் என்கிற காரணத்தாலும், மேற்காணும் 7 தி.மு.க. உறுப்பினர்களும் நேரில் வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்து, மன்னிப்பும் கோரி எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபட மாட்டோம் என அவர்கள் உறுதியளித்துள்ளதை ஏற்றுக்கொண்டும், இதுமாதிரி எதிர்காலத்தில் அவர்கள் நடக்க மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்போடும், பேரவை முன்னவர் முன்மொழிந்துள்ள தீர்மானத்தை பேரவையின் அனுமதியோடு திரும்பப்பெற்றுக் கொண்டு, அவை உரிமை மீறல் செயலைச் செய்த 7 தி.மு.க. உறுப்பினர்களை எச்சரித்து, பிரச்சினையை இத்தோடு விட்டுவிடலாம் என நான் கருதுகிறேன். இதனை பேரவை தயவுசெய்து பரிசீலனை செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.
தீர்மானம் நிறைவேறியது
இதனையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், உங்களது வேண்டுகோள் அல்ல; உங்களது உத்தரவு என எடுத்து கொண்டு நான் முன்மொழிந்த தீர்மானத்தை (7 பேருக்கும் தண்டனை வழங்கும் தீர்மானம்) திரும்ப பெறுகிறேன். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் வந்தவர் நீங்கள் (சபாநாயகர்). அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் நீங்கள். மனித நேயம், இரக்க குணம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்கள் உத்தரவை ஏற்று நான் முன்மொழிந்த தீர்மானத்தை திரும்ப பெற தீர்மானம் ஒன்றை முன்மொழிகிறேன் என்றார். இதனையடுத்து அந்த தீர்மானம் (தண்டனை வாபஸ்) குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.
மு.க.ஸ்டாலின் நன்றி
இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று நீங்கள் பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளீ ர்கள். தி.மு.க. சார்பில் பேரவை தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவை முன்னவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சம்பவம் நடந்த அன்று தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்திருந்தால் மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன் என்று அன்றைக்கே சொல்லியிருக்கிறேன். தங்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அபுபக்கர் ஆகியோரும் சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.