முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் கடும் வறட்சியால் ஊரை காலி செய்யும் கிராம மக்கள்

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள மக்ரான் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில்லை. இதனால் கிராம மக்கள் வேறு வழி தெரியாமல் ஊரை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் உள்ள மக்ரான் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில்லை. ஏற்கனவே இந்த பகுதியில் சரியாக மழை பெய்வது இல்லை. 2 ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்யாததால் அங்கு கடுமையான வறட்சி நிலவுகிறது.

அனைத்து இடங்களிலும் ஏரி, குளங்கள் முற்றிலும் வற்றி விட்டன. இதனால் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் அல்ல, குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை.

குடிநீருக்காக பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தனர். ஆனாலும், நிலத்தடி நீர் குறைந்து விட்டதால் அந்த கிணறுகளிலும் தண்ணீர் கிடைக்கவில்லை.

70 சதவீத மக்கள் வெளியேற்றம்

இதனால் கிராம மக்கள் வேறு வழி தெரியாமல் ஊரை விட்டு வெளியேறி வருகிறார்கள். கவதார் மாவட்டத்தில் கிராம பகுதிகளை சேர்ந்த 70 சதவீத மக்கள் வெளியேறி இருக்கிறார்கள்.இதேபோல் பஞ்ச் கார் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. விரைவில் அங்கு மழை சீசன் தொடங்க உள்ளது. அப்போதும் மழை சரியாக பெய்யாவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து