முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம்: 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் பலி

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

அங்காரா : துருக்கி நாட்டில் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்ததால் அதில் குளித்துக்கொண்டிருந்த 3 சிறுவர்களும், சிறுவர்களை காப்பாற்றச்சென்ற 2 பேரும் பரிதாமாக உயிரிழந்தனர்.

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியான சகார்யா மாகாணத்தில் உள்ள அக்யாஷி என்ற பகுதியில் உல்லாச பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 12, 15, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதனால், அதிலிருந்த சிறுவர்கள் அலறி துடித்தனர். இதனை கண்டதும் பூங்கா மேலாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்டென தண்ணீரில் குதித்து சிறுவர்களை காப்பாற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், மின்சாரத்தில் சிக்கி 3 சிறுவர்கள் மற்றும் பூங்கா மேலாளர், மேலாளரின் மகன் ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தண்ணீரில் எப்படி மின்சாரம் பாய்ந்தது என்பது குறித்து போலீசார் விடாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து