எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"தமிழ்நாட்டில் மாநில பாடப்பிரிவு முறையில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது." - அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்
சென்னை : தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையின் போது மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளதாகவும் நேற்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உறுப்பினர்கள் கேள்வி
சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து, நீட் தேர்வு முடிவு தற்போது வந்திருக்கிறது. ஆனால், அந்தத் தேர்வினுடைய முடிவை பார்த்தால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதை எப்படி மீட்பது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. எனவே, நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழகத்தை மீட்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதிலளித்து பேசியதாவது:-
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி ஆகியோர் நீட் தேர்வையொட்டி அடுத்து அரசின் நிலைப்பாடு என்ன என்பதைக் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு இதுகுறித்து கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவந்தபோது, அரசின்நிலைப்பாட்டினை நான் தெளிவாகச் சுட்டிக்காட்டினேன்.
அரசின் கவனம்
நீட் தேர்வு முடிவு வந்திருக்கிறது. நம்முடைய சட்டமன்றத்தில் ஏற்கெனவே 2 மசோதாக்கள், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, அவை மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி நான் ஏற்கெனவே இந்த அவையில் தெரிவித்திருந்தேன். இன்றைய சூழ்நிலையில், இன்றைக்கு பிளஸ்-2 தேர்வுகள் எழுதிவிட்டு காத்துக் கொண்டிருக்கும் அத்துணை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளை அரசு மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதேபோல தலைமைச் செயலாளர், அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்ட நிபுணர்கள் அத்துணைபேரும் மிகுந்த கவனத்துடன் நம்முடைய இந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற பெஞ்சு தீர்ப்பு, மத்திய அரசின் சட்டம் இவற்றையெல்லாம் அரசு கவனத்தில்கொண்டு செயல்படுகிறது.
பிரதிநிதித்துவம் அளிக்க ...
நான் ஏற்கெனவே சொன்னதுபோல், 4.2 லட்சம் பேர் இந்த மாநில பாடப்பிரிவில் பயோலஜி தேர்வு எழுதியிருக்கிறார்கள். அதேபோல 4,675 மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வு எழுதியிருக்கிறார்கள். இந்த 4.2 லட்சம் பேர் இந்த மாநில பாடப்பிரிவில் பயோலஜி தேர்வு எழுதியவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய அத்துணை பேரின் உணர்வு. அதற்காகத்தான் இந்த மாமன்றத்தில் இந்த 2 மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அழுத்தம் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அரசாணை வெளியீடு
இந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனும் சொன்னார். மாநில பாடப்பிரிவில் பயோலஜி எழுதிய மாணவர்கள் நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக வாங்கியிருக்கிறார்கள் என்ற கருத்தைச் சொன்னார். இந்தச் செய்தி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்திருக்கின்றது. அப்படி குறைவாக மதிப்பெண்கள் வாங்கினாலும் கூட, அந்த மாணவர்களின் பிரதிநிதித்துவம் எந்தவிதத்திலும் பாதிக்ககூடாது என்பதை மிகுந்தகவனத்தோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, ஜூன் 22-ம் தேதி மாலை ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
85 சதவீதம் ஒதுக்கீடு
அந்த அரசாணையில் இந்த அரசின்நிலைப்பாட்டைச் சொல்லியிருக்கிறோம். மத்திய அரசில் 2 மசோதாக்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், சட்டமன்றத்தில் நம்மால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒத்துக்கொள்ளப்பட்டால், பிளஸ்-2 தேர்வு எழுதி மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை நடைபெறும். ஒருவேளை இதில் காலதாமதம் ஏற்படுகிறபோது, இங்கு 4.2 லட்சம் மாணவர்கள் மாநில பாடப்பிரிவில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். 4,675 மாணவர்கள் மத்திய பாடப்பிரிவில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இதில் விகிதாச்சாரப்படி எடுத்தக்கொண்டால் கூடகிட்டத்தட்ட 95 சதவிகிதம் நம்முடைய மாநில பாடப்பிரிவு மாணவர்களுக்கும், 5 சதவிகிதம்தான் சி.பி.எஸ்.இ மாணவர்களும் இருப்பார்கள். இவற்றையெல்லாம் மனதிலே வைத்துதான், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இப்போது 15 சதவிகிதம் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், நம்முடைய மாநில மாணவர்களின் உரிமையை நிலைநாட்டக்கூடியவகையில், அரசு மிகுந்த கவனத்தோடு 85 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியை, நீங்கள் அத்துணைபேரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்தச் செய்தியை நான் இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உள்ஒதுக்கீடு அடிப்படையில் ...
ஆகவே, திட்டமிட்டபடி ஜூன் 26-ம் தேதி இதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்படும். ஜூன் 27-ம் தேதியிலிருந்து பிளஸ்-2 முடித்த அனைத்து மாணவர்களும் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம். அகில இந்திய கலந்தாய்வு முடிந்த பிறகு, அடுத்தம் மாதம் 17- ம் தேதி திட்டமிட்டபடி நம்முடைய தமிழ்நாடு அரசினுடைய மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும். அந்தக் கலந்தாய்வு இந்த உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கும். நிச்சயமாக இந்த உள்ஒதுக்கீட்டை அனைத்து உறுப்பினர்களும், அனைத்து கட்சியினரும் ஏற்பார்கள். நீங்களெல்லாம் தொடர்ந்து இந்தமாநிலத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தீர்கள். அதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து இந்த நல்ல முடிவை எடுத்திருக்கின்றார்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.