எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"தமிழ்நாட்டில் மாநில பாடப்பிரிவு முறையில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது." - அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்
சென்னை : தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையின் போது மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளதாகவும் நேற்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உறுப்பினர்கள் கேள்வி
சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து, நீட் தேர்வு முடிவு தற்போது வந்திருக்கிறது. ஆனால், அந்தத் தேர்வினுடைய முடிவை பார்த்தால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதை எப்படி மீட்பது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. எனவே, நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழகத்தை மீட்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதிலளித்து பேசியதாவது:-
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி ஆகியோர் நீட் தேர்வையொட்டி அடுத்து அரசின் நிலைப்பாடு என்ன என்பதைக் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு இதுகுறித்து கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவந்தபோது, அரசின்நிலைப்பாட்டினை நான் தெளிவாகச் சுட்டிக்காட்டினேன்.
அரசின் கவனம்
நீட் தேர்வு முடிவு வந்திருக்கிறது. நம்முடைய சட்டமன்றத்தில் ஏற்கெனவே 2 மசோதாக்கள், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, அவை மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி நான் ஏற்கெனவே இந்த அவையில் தெரிவித்திருந்தேன். இன்றைய சூழ்நிலையில், இன்றைக்கு பிளஸ்-2 தேர்வுகள் எழுதிவிட்டு காத்துக் கொண்டிருக்கும் அத்துணை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளை அரசு மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதேபோல தலைமைச் செயலாளர், அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்ட நிபுணர்கள் அத்துணைபேரும் மிகுந்த கவனத்துடன் நம்முடைய இந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற பெஞ்சு தீர்ப்பு, மத்திய அரசின் சட்டம் இவற்றையெல்லாம் அரசு கவனத்தில்கொண்டு செயல்படுகிறது.
பிரதிநிதித்துவம் அளிக்க ...
நான் ஏற்கெனவே சொன்னதுபோல், 4.2 லட்சம் பேர் இந்த மாநில பாடப்பிரிவில் பயோலஜி தேர்வு எழுதியிருக்கிறார்கள். அதேபோல 4,675 மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வு எழுதியிருக்கிறார்கள். இந்த 4.2 லட்சம் பேர் இந்த மாநில பாடப்பிரிவில் பயோலஜி தேர்வு எழுதியவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய அத்துணை பேரின் உணர்வு. அதற்காகத்தான் இந்த மாமன்றத்தில் இந்த 2 மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அழுத்தம் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அரசாணை வெளியீடு
இந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனும் சொன்னார். மாநில பாடப்பிரிவில் பயோலஜி எழுதிய மாணவர்கள் நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக வாங்கியிருக்கிறார்கள் என்ற கருத்தைச் சொன்னார். இந்தச் செய்தி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்திருக்கின்றது. அப்படி குறைவாக மதிப்பெண்கள் வாங்கினாலும் கூட, அந்த மாணவர்களின் பிரதிநிதித்துவம் எந்தவிதத்திலும் பாதிக்ககூடாது என்பதை மிகுந்தகவனத்தோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, ஜூன் 22-ம் தேதி மாலை ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
85 சதவீதம் ஒதுக்கீடு
அந்த அரசாணையில் இந்த அரசின்நிலைப்பாட்டைச் சொல்லியிருக்கிறோம். மத்திய அரசில் 2 மசோதாக்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், சட்டமன்றத்தில் நம்மால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒத்துக்கொள்ளப்பட்டால், பிளஸ்-2 தேர்வு எழுதி மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை நடைபெறும். ஒருவேளை இதில் காலதாமதம் ஏற்படுகிறபோது, இங்கு 4.2 லட்சம் மாணவர்கள் மாநில பாடப்பிரிவில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். 4,675 மாணவர்கள் மத்திய பாடப்பிரிவில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இதில் விகிதாச்சாரப்படி எடுத்தக்கொண்டால் கூடகிட்டத்தட்ட 95 சதவிகிதம் நம்முடைய மாநில பாடப்பிரிவு மாணவர்களுக்கும், 5 சதவிகிதம்தான் சி.பி.எஸ்.இ மாணவர்களும் இருப்பார்கள். இவற்றையெல்லாம் மனதிலே வைத்துதான், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இப்போது 15 சதவிகிதம் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், நம்முடைய மாநில மாணவர்களின் உரிமையை நிலைநாட்டக்கூடியவகையில், அரசு மிகுந்த கவனத்தோடு 85 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியை, நீங்கள் அத்துணைபேரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்தச் செய்தியை நான் இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உள்ஒதுக்கீடு அடிப்படையில் ...
ஆகவே, திட்டமிட்டபடி ஜூன் 26-ம் தேதி இதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்படும். ஜூன் 27-ம் தேதியிலிருந்து பிளஸ்-2 முடித்த அனைத்து மாணவர்களும் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம். அகில இந்திய கலந்தாய்வு முடிந்த பிறகு, அடுத்தம் மாதம் 17- ம் தேதி திட்டமிட்டபடி நம்முடைய தமிழ்நாடு அரசினுடைய மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும். அந்தக் கலந்தாய்வு இந்த உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கும். நிச்சயமாக இந்த உள்ஒதுக்கீட்டை அனைத்து உறுப்பினர்களும், அனைத்து கட்சியினரும் ஏற்பார்கள். நீங்களெல்லாம் தொடர்ந்து இந்தமாநிலத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தீர்கள். அதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து இந்த நல்ல முடிவை எடுத்திருக்கின்றார்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காமி விமர்சனம்
18 Mar 2024நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேர
-
காடுவெட்டி விமர்சனம்
18 Mar 2024கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும்
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ரோமியோ இசை வெளியீடு
18 Mar 2024அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
-
அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
பிரேமலு விமர்சனம்
18 Mar 2024கல்லூரியில் படிக்கும் நாயகன் சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார்.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வரும் 21-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவலையும் வெளியிட வேண்டும்: எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்.பி.ஐ.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது?
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும், நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
கா இசை வெளியீடு
18 Mar 2024நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, தற்போது நடித்து வரும் 'கா' படத்தில் வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்து வரும் நிலையில், இம்மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.