முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா மருந்தகங்களில் தள்ளுபடி விலையில் மருந்துகள்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா மருந்தகங்களில் தரமான மருந்துகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா மருந்தகங்கள் தொடங்கப்பட்டு, இதுநாள் வரையில் 13ஆயிரத்து 244 பயனாளிகள் ரூ.223 லட்சம் மதிப்பில் தரமான மருந்துகளை பெற்று பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் மருந்து விற்பனையில் வெளிச்சந்தையில் உள்ள விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மருந்து உபயோகிப்பாளர்களுக்கு குறைந்த விலையில் மருந்து விநியோகம் செய்திடும் நோக்கத்துடன் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா மருந்தகங்கள் தொடக்கி வைக்கப்பட்டது. ராமநாதபுரம்; மாவட்டத்தில் பரமக்குடி மற்றும் கீழக்கரை ஆகிய இரண்டு இடங்களில் அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில், அம்மா மருந்தகம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை ரூ.223 லட்சம் மதிப்பில் 13ஆயிரத்து 244 பயனாளிகள் குறைந்த விலையில் தரமான மருந்துகளை பெற்று பயனடைந்துள்ளனர். நாள்தோறும் சராசரியாக 350 வாடிக்கையாளர்கள் வருகை தந்து அம்மா மருந்தகத்தை பயன்படுத்துகின்றார்கள். மேலும் வாடிக்கையாளரின் வசதிக்காக அவர்களுக்கு தேவைப்படும் மருந்துகளை அவர்களது வீட்டு முகவரிக்கே நேரடியாக கொண்டு சென்று சிறப்பான சேவை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் அம்மா மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் அதிகபட்ச கூடுதல் விலையில் இருந்து 15 சதவீதம் குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று சர்ஜிகல் இனங்களுக்கு அதிகபட்ச கூடுதல் விலையில் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையிலும் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சில ஜெனிரிக் மருந்துகளுக்கு அதிகபட்சமாக 35 சதவீதம் வரையிலும் தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் வளரும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு சத்து மிகுந்த உணவுப் பொருட்களுக்கு அனைத்தும் அதிகபட்ச கூடுதல் விலையில் 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

வார நாட்கள் முழுவதும் விடுமுறையின்றி காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் வாடிக்கையாளர்களின் சேவைக்காக அம்மா மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இதற்காக தனியாக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கூட்டுறவுத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மா மருந்தகங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கு தேவையான மருந்துகளை மிகக் குறைந்த விலையில் பெற்று பயனடையலாம். இ;நத தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து