முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் எண்ணெய் லாரி தீ பிடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில் டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 149 பேர் உடல் கருகி பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்ததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

டேங்கர் லாரி கவிழ்ந்தது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பகாவல்பூரில், அகமத் பூர் ஷார்கியா பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்தது. டேங்கர் லாரி கவிழ்ந்தது தொடர்பான தகவல் கேட்டதும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடங்கள், வாளிகள் உள்ளிட்ட பொருட்களுடன் ஆயிலை சேகரிக்க சென்றனர். ஆயிலை சேகரிக்க மக்கள் கூடியிருந்த நிலையில் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. லாரி தீ பிடித்து எரிந்தது உள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில் குறைந்தது 6 கார்கள் 12 மோட்டார்சைக்கிள்கள் தீக்கிரையாகின.

எண்ணிக்கை உயரும்

டேங்கர் லாரி வெடித்து அப்பகுதியில் தீ பரவியது தொடர்பாக தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 125 பேர் பலியாகினர் என்றும்  75-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகின.

149 பேர் பலி

விபத்தில் காயம் அடைந்தவர்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்டோருக்கு அந்நாட்டு ராணுவம் உதவி செய்து வருகிறது. காயம் அடைந்தவர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ரமலான் கொண்டாட உள்ளநிலையில் பாகிஸ்தானில் பெரும் துயர சம்பவம் நடைபெற்று உள்ளது, அந்நாட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. இதற்கிடையே பலியானோர் எண்ணிக்கையானது 149 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த 160 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களில் பெரும்பாலோனர் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மக்கள் கொந்தளிப்பு

தீ விபத்து நடைபெறுவதற்கு முன்னதாகவே போலீஸ் அப்பகுதிக்கு சென்றுவிட்டது, ஆனால் உள்ளூர் மக்கள் எண்ணெய்யை சேகரிப்பதில் கவனமாக இருந்ததால் அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மிகவும் குறுகிய நேரத்தில் தீ விபத்து நேரிட்டது எப்படி என தெரியவில்லை என்றே தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்துக்கு சமூகவலைத்தளங்களில் மக்கள் தங்கள் ஆழ்ந்த வருத்தங்களையும், அனுதாபங்களையும் தெரிவித்தவண்ணம் உள்ளனர். பயங்கரவாதம் விபத்து மற்றும் அலட்சியத்தினால் ஏகப்பட்ட உயிர்கள் அழிந்துவருவதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து