எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவம் சார்ந்த பி.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. மருத்துவ மாணவர்கள் சேர்கையில், தமிழக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
8-ம் தேதி கடைசிநாள்
இது குறித்து மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜன் கூறியதாவது:-
2017-18-ம் ஆண்டிற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவம், பல்மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் ஜூலை 7-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விற்பனை செய்யப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணி வரை செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162. பெரியார் ஈ.வே.ரா.நெடுஞ்சாலை, கீழ்பாக்கம். சென்னை 10.என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விநியோகிக்கும் இடங்கள்
மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும். சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, அரசு தேனி மருத்துவக் கல்லூரி, அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
ரூ.500 கட்டணம்
விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்கம், மாணவர் சேர்க்கை குழுவில் வழங்கப்படாது. விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பு கையேட்டினை பெறுதவற்கு கட்டணமாக ரூ.500-க்கு செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம் என்ற பெயரில் டி.டி.எடுத்துக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி.எஸ்.டி.பிரிவினர், அருந்ததியினர் சாதி சான்றிதழ்களின் நகலை சமர்பித்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களையும், பிற விவரங்களையும் www.tnhealth.org., www. tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தமிழத்தில் உள்ள மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
நீட் தேர்வு மதிப்பெண் ...
தமிழகத்தில் 22 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து மொத்தம் 3050 இடங்கள் உள்ளது. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15 சதவீதம் 456 இடங்கள் அளிக்கப்படும். மீதமுள்ள 2594 இடங்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாநில தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. அவற்றில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 2094 இடங்களும், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 109 இடங்களும் ஆக 2,203 இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், 401 இடங்கள் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மற்றும் பிற தேர்வு வாரியங்கள் மூலம் படித்த மாணவர்களுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கப்படும்.
85 சதவீதம் ஒதுக்கீடு
அதேபோல் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளை பொறுத்தவரை மாநில அரசால் ஒப்புதல் பெற்ற 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கு ஒப்படைக்கப்படும் 783 இடங்களில் 85 சதவீதம் அதாவது, 664 இடங்களுக்கு மாநிலத் தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள¢ள 15 விழுக்காடு அதாவது 119 இடங்கள் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மற்றும் பிற தேர்வு வாரியங்கள் மூலம் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்.
கலந்தாய்வு மூலம் ...
பல்மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு அரசு பல்மருத்துவக் கல்லூரி, ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியில் உள்ள 200 இடங்களில் 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், மாநில ஒதுக்கிட்டிற்கான 170 இடங்களில் மாநிலப்பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 144 இடங்களும், பிற வாரியப்பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 26 இடங்களும் அளிக்கப்படும். சுயநிதி பல்மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கான 1,190 இடங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 1,011 இடங்களும், பிற வாரியப்பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 179 இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் விளக்கம்
இந்த ஆண்டு நீட் தேர்வு முறை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? பிளஸ் 2 மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்களா? என்ற குழப்பம் நிலவி வந்தது. பெற்றோர், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்துக்கு தமிழக சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சமீபத்தில் சட்டசபையில் விளக்கம் அளித்தார். இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மேலும் தெரிவித்தாவது:-
அரசு மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்பட்டது போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில கலந்தாய்வு நடைபெறும். குறிப்பாக தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியையும் சேர்த்து மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கிட்டு இடங்கள் 456 ஆகும். மீதமுள்ள 2594 இடங்கள் தற்போது வெளியிட்டுள்ள அரசாணைப்படி 85 சதவீத இடங்கள் தமிழக சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் கலந்தாய்வு தொடங்கும் நாள் வரை கிடைக்காவிட்டால் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாநில தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
பாதிப்பு ஏற்படாது
இந்த ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் 2094 இடங்களும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்களையும் சேர்த்து 2203 இடங்களும் அடங்கும்.மீதமுள்ள 15 சதவீத 391 இடங்கள் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, பிற தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். சுயநிதி மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை மாநில அரசால் ஒப்புதல் பெற்ற 10 கல்லூரிகளில் உள்ள 783 இடங்களில் 667 இடங்கள் மாநில வாரியத்தில் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள 119 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.