முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் முஸ்லீம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலையில் நேற்று நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.

 

சிறப்பு தொழுகை

 

திருவண்ணாலை மணலூர்பேட்டை சாலையிலுள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லீம்கள் ஒருவரையருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொழுகை முடிந்து வெளியேவந்த தொழிலதிபர் எம்.இ.ஜமாலுதீன் உள்ளிட்ட முஸ்லீம்களுக்கு முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்எல்ஏ, முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன் ஆகியோர் இனிப்பு கொடுத்து வாழ்த்தினர். இதேபோல் அதிமுக சார்பில் அதிமுகவினர் இனிப்பு கொடுத்து வாழ்த்தினர்.

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையிலுள்ள ஈத்கா மைதானம், செங்கம் ரோடு பாலாஜி நகரில் ஈத்கா மைதானம் ஆகிய இடங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த சிறப்பு தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து