எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்-பாரதரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாமினை அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அ.தி.மு.க நிறுவன தலைவரும்,முன்னாள் முதல்வருமாகிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் வெகுவிமரிசையாக மாநிலம் முழுவதிலும் கொண்டாடப்படவுள்ளது.இதையொட்டு வரும் 30ம் தேதி மதுரை பாண்டிகோவில் அருகிலுள்ள அம்மா திடலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி லட்சக்கணக்கானோர் பங்கேற்புடன் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது.இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.இந்த முகாமிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர்.வைரமுத்து, இணை இயக்குனர் டாக்டர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பூமிநாதன் வரவேற்று பேசினார்.
திரளான பொதுமக்கள்,கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இரத்ததானம் செய்த இந்த இரத்ததான முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்கள்.முதலாவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலகமே வியந்திடும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் மதுரையில் மாபெரும் விழா நடைபெறவுள்ளது.எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிட அம்மாவின் வழியில் வந்த நாங்கள் எம்.ஜி.ஆரின் புகழ்பாட எங்களின் உயிரினையும் தந்திடுவோம்.தற்போது மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.எம்.ஜி.ஆரின் நுற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது அ.தி.மு.க அரசு இருக்கவேண்டும் என்ற அம்மாவின் லட்சியம் நிறைவேறியுள்ளது.ஆனால் அம்மா மறைந்து விட்டார்கள்.ஆனால் தாயின் ஆசியுடன் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு தான்.மக்களுக்கா பல்வேறு பணிகளை நாள்தோறும் செய்து வரும் ஒரே அரசு அம்மாவின் அரசு மட்டும் தான்.விரைவில் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வசதிகளும் விரைவில் செய்து தரப்பட்டு அதன் புகழும் கட்டிடங்களும் விண்ணை நோக்கி உயர்ந்து நிற்கும் என்று பேசினார்.
இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழகத்தில் 200 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளின் சுகாதார பிரிவிற்கு அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கபட்டு வருகின்றனர்.இருப்பினும் 145 படுக்கை வசதி கொண்ட திருமங்கலம் அரசு மருத்துமனைக்கு அவுட்சோர்சிங் முறையில் சுகாதார பிரிவிற்கு பணியாளர்களை நியமித்திட உடனடியாக உத்தர விடப்படும்.அதே போல் எலும்பு முறிவு உள்ளிட்ட அனைத்து சிறப்பு மருத்துவர்கள் நியமனம்,அடிப்படை கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின்அனுமதி பெற்று அறிவிக்கப்படும்.மதுரையில் எந்த காரியம் தொடங்கினாலும் அம்மாவின் நல்லாசியுடன் அது வெற்றி பெறும் என்பது நிச்சயம்.அதே போன்று மதுரையில் துவங்கவுள்ள எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தின் வரலாற்றை புரட்டிப் போடுகிறன்ற அளவிற்கு வரலாற்றில் இடம் பிடித்திடும்.
தற்போது சென்னை மருத்துவத்தின் தலைநகராக உள்ளது.மருத்துவத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை கொண்டு வந்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்காக மதுரையில் 150கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அதே போல் தென்மாவட்ட மக்கள் பயன்பெற்றிடும் வகையில் 50கோடி செலவில் அதிநவீன மகப்பேறு மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஜெய்கா திட்டத்தின் கீழ் 1634கோடி மதிப்பீட்டில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை,மதுரை அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள் அதிநவீன படுத்தப்படவுள்ளது.மதுரை அரசு மருத்துவமனையில் 350கோடி செலவில் 16ஆப்பரேசன் தியேட்டர்கள்,1எம்.ஆர்.ஐ,1சி.டி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சர்வதேச மருத்துவ தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட வுள்ளது.தற்போது மதுரைக்கு மட்டும் 550கோடிமதிப்பீட்டில் மருத்துவ வசதிகள் அரசினால் செய்து தரப்பட்டு வருகிறது.இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றிடும் போது தென்மாவட்ட மக்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்திடும். இவற்றுக்கெல்லாம் மேலாக 5 தென்மாநிலங்களுக்கு மத்தியில் 203கோடி மதிப்பீட்டில் மெட்ரோ பிளட் பேங்க் எனும் மாபெரும் ரத்தவங்கி சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை மகிழச்சியுடன் திருமங்கலம் நகரில் வைத்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
முன்னதாக அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,ஆர்.பி.உதயகுமார்,மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று திருமங்கலம் அரசு மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.இவ்விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,வக்கீல்ரமேஷ்,திருமங்கலம் நகரச் செயலாளர் விஜயன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் அவைதலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைதலைவர் சதீஸ்சண்முகம்,திருமங்கலம் ஒன்றிய துணை செயலாளர்கள் சுகுமார்,சுமதிசாமிநாதன்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.