முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வலியுறுத்தி திருமங்கலத்தில் உண்ணாவிரதம்:

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வலியுறுத்தி திருமங்கலம் நகரில் தி.மு.க.,காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வலியுறுத்தி தென்மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து கட்சியினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வலியுத்தி திருமங்கலம் நகரில் தி.மு.க முன்னின்று நடத்திய அனைத்து கட்சி உண்ணாவிரத போராட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பாக சிறப்பாக நடைபெற்றது.இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா தொடங்கி வைத்தார்.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மூர்த்தி எம்.எல்.ஏ.,மு.மணிமாறன்,கோ.தளபதி,வேலுச்சாமி,மதுரை மத்தி எம்.எல்.ஏ.,பழனிவேல் தியாகராஜன்,முன்னாள் அமைச்சர் தமிழரசி,முன்னாள் எம்.எல்.ஏ.,சாமிநாதன்,மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர்.ஜெயராம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இன்குலாப்,முன்னாள் எம்.எல்.ஏ.,கதிரவன் மற்றும் சில கட்சிகளின் தலைவர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் அமைவது குறித்து விளக்கமாக பேசினார்கள்.காலையில் தொடங்கி மாலை வரையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தின் நிறைவில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மு.மணிமாறன் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து