முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார்

புதன்கிழமை, 28 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிரதமர் நரேந்திரமோடி தனது 3 நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றுக்காலையில் புதுடெல்லி திரும்பினார். நாடு திரும்பிய மோடியை டெல்லி விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு பயணமாக போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றார். முதலில் போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்ற மோடி, அந்த நாட்டு பிரதமர் அன்டனியோ கோஸ்டாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு இந்தியா போர்ச்சுக்கல் இடையே பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்பட 11 துறைகளில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டது. போர்ச்சுக்கல் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு மோடி சென்றார். அமெரிக்காவில் வாஷிங்டன், வர்ஜினியா ஆகிய நகரங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொண்டு பேசினார். பின்னர் அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். வெள்ளைமாளிகையில் மோடிக்கு சிவப்புகம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. மோடியும் டிரம்பும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

மேலும் பாதுகாப்பு, ராணுவம் ஆகிய துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு இருநாடுகளும் முடிவு செய்தனர். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நெதர்லாந்து நாட்டுக்கு கடைசி நாள் பயணமாக மோடி சென்றார். மோடியும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூத்தை சந்தித்து பேசினார். அணுசக்தி ஒப்பந்த நாடுகளுடனும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்கவும் பிரதமர் மார்க் ஆதரவு தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்தை இரண்டு நாடுகள் சேர்ந்து ஒழிக்க முடிவு செய்யப்பட்டது. நெதர்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்றுக்காலையில் புதுடெல்லி திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து