எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் அரக்கோணம் நகராட்சி டி.என்.எச்.பி. காலணியில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டேக்வாண்டோ உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தை பள்ளி கல்வி,; விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி விழா சிறப்புiயாற்றினார்கள்.இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி.அ.ராமன். தலைமை தாங்கினார்.இந்த விழாவிற்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்தீபன், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி அவர்களும் முன்னிலை வகித்தனர்.
ஊக்கத்தொகை
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் பேசியதாவது. மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இந்த டேக்வோண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மறைந்த முதலவர் அம்மா இந்தியாவிலேயே தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களையும், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கணைகளுக்கு நிதியுதவிகளை வழங்கி அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்கள். மறைந்த முதல்வர் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் விளையாட்டுத்துறைக்கு என்று தனியாக ஒரு பல்கலைகழகத்தை உருவாக்கி விளையாட்டு துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு விளையாட்டுத்துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ரூ.4.80 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையினை வழங்கியுள்ளது. மேலும் மறைந்த முதல்வர் அம்மா சர்வதேச அளவிலான நேரு விளையாட்டரங்கினை அமைத்து தமிழகத்திற்கு பெருமையை சேர்த்தார்கள்.
வேலூர் மாவட்டம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகிறது. இந்த மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனையை படைத்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையை மேலும் மேம்படுத்தும் விதத்தில் ரூ5.0 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய விளையாட்டரங்கமும், ரூ.1.0 கோடி மதிப்பில் அரக்கோணத்தில் ஒரு விளையாட்டரங்கமும் விரைவில் கட்டப்படும். இந்த விளையாட்டரங்கம் தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்தில் ரூ.70 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ24 இலட்சம் தனியார் பங்களிப்பும் உள்ளது அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி மாவட்டம் மூன்று கல்வி மாவட்டமாக உருவாக்கப்படும் இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறன் மேம்படும் இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு போட்டியில் வெற்றியும் தோல்வியும் சகஐமான ஒன்று. தோல்வி என்பது வெற்றிக்கான படிகட்டுகள் மேலும் இளைஞர்கள் முயன்றால் முடியாதது ஏதுமில்லை. மூச்சு நின்றால்தான் மரணம் அல்ல முயற்சி செய்யவில்லை என்றாலும் அது வெற்றி கிடைப்பதில் ஏற்படும் மரணம் ஆகும். ஆகவே மாணவர்களும் இளைஞர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். இந்த அரக்கோணம் டோக்வோண்டோ விளையாட்டு மூலம் இப்பகுதியல் உள்ள பல இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் எதிர் வரும் காலங்களிலும் இந்த விளையாட்டை மாணவர்கள் சிறந்;;த முறையில் கற்று வெற்றி பெற்று தமிழகத்திற்கும் இந்தயாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று வாழ்த்தி விழாவில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாட்களில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடங்கிய 100 நாள் சாதனை கையேட்டினை பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களும், வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும் வெளியிட்டார்கள். மேலும் வருவாய் துறையின் மூலம் 120 இருளர் இனத்தை சார்ந்தவர்களுக்கு இருளர் இன சான்றிதழ்களையும், 44 பயனாளிகளுக்கு ரூ.5.இலட்சத்து 10ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவி, திருமண நிதியுதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரண நிதியுதவித்தொகையினையும் அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எ.ஜி.விஜயன், அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், வேக்வாண்டோ சங்கத் தலைவர் மரு.சி.எஸ்.சந்திரமௌலி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் துரைகுப்புசாமி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை கே.ராமமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஜி.கமலகுமாரி, நகராட்சி பொறியாளர் எம்.சண்முகம், அரக்கோணம் வட்டாட்சியர் பாஸ்கரன், அல்ட்ராடெக் நிர்வாக அலுவலர் ஜி.உதயகுமார், கிளைத் தலைவர் பிரசாந்த்ரஸ்தோகி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்