முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வழங்கினார்

திங்கட்கிழமை, 3 ஜூலை 2017      தேனி
Image Unavailable

  தேனி.- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (03.07.2017) இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 202 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து, 14 பயனாளிகளுக்கு ரூ.12,78,386 - மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.3,25,000 - வீதம் ரூ.9,75,000 - (அரசு மானியம் ரூ.75,000 -) மதிப்பிலான மினி டிராக்டர் வாகனத்தினையும், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.30,000 - வீதம் ரூ.3,00,000 - மதிப்பிலான குளிர் சாதன வசதியுடன் கூடிய நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.3,386 - மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரத்தினையும் என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.12,78,386 - மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு சீர்மரபினருக்கான அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தி.செ.பொன்னம்மாள் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிஷோர்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சந்திரசேகரன் மாவட்ட வழங்கல் அலுவலர் தி.ரசிகலா செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தி.ஜெயசீலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி உதவி இயக்குநர் (கனிமம்) சாம்பசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து