Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்-கலெக்டர் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 3 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நiபெற்றது.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர்  அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.  
   முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில், தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்து அரசுத்துறை அலுவலர்களும  எடுத்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்;ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி,  சமூக பாதுகாப்பு தனித்துணை திட்ட ஆட்சியர் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியன்  உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து