எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஜூலை - மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில், எலும்பு மூட்டு, முதுகெலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் முதன்முறையாக ஆர்த்அலைன் என்னும் அதிநவீன தொழில்நுட்பம் துணைகொண்டு மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் முதுநிலை எலும்பு மூட்டு, முதுகெலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர். மு. ராஜபாண்டியன் கூறும்போது, "உலகளவில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சையில், மூட்டு சீரமைப்பை துல்லியமாக செய்து முடிப்பதில் பல்வேறு பரிமாணங்களை கண்டுவிட்டது இந்த மருத்துவ உலகம். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் துல்லியமாகவும் மற்றும் கைதேர்ந்தவர்கள் மட்டுமே செய்யக் கூடியதாகும் ஏனெனில் மூட்டு எந்தளவுக்கு கச்சிதமாக பொருந்துகிறதோ, அதன் செயல்பாடு அதைச் சார்ந்தது ஆகும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இதற்கு பெரிதும் துணைபுரிந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பாரம்பரிய அறுவை சிகிச்சை முறையை விட கணிணி துணை கொண்டு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் மூலம் ஓரளவிற்கு துல்லியமான சீரமைப்பை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பெற்றுக் கொண்டிருந்தனர். இந்த கணிணி துணை கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளால் பாரம்பரிய முறையை விட குறைந்த வலி, குறைந்த நாட்களில் குணமடைதல் போன்றவற்றை அடைந்தாலும், சீரமைப்பின் துல்லியத்தில் மனநிறைவு ஏற்படுவது எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு சவாலாகவே இருந்தது. துல்லியம் என்பது செயற்கை மூட்டை (வுமுசு) சரிவர நேர்பட பொருத்துதல் ஆகும். இந்த கணிணி துணை அதிநவீன ஆர்த்அலைன் என்னும் கருவியானது மிகவும் எளிமையானதாகவும், துல்லியமான சீரமைப்பையும் கொண்டுள்ளது. இந்நக் கருவி கையடக்கமான, ஒவ்வொரு நோயாளிக்கென்றும் பிரத்யேகமாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் அதினநவீன தொழில்நுட்ப கருவியாகும்.
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உண்டாயிருந்த கவலைகளை நிவர்த்தி செய்ய ஒரு விடிவெள்ளி போல தோன்றியுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்ப கருவியால் எலும்பு மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சையில் மூட்டுகளை ஊடுருவிச் சென்று, மூட்டுகளை துல்லியமாக அளவெடுத்து, சீரமைத்து துல்லியமாக மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படுகிறது. மேலும்;, மூட்டு செயற்கை உள்வைப்புகளை (iஅpடயவெள) சரியாக பொருத்தவும் முடியும்.
அது மட்டுமல்லாமல், இந்த தொழில்நுட்பத்தின் மூலம், மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட கால் முன்னெலும்பு, இடுப்பு எலும்புகளை கச்சிதமாக வெட்டுதல் மற்றும் முழங்கால் பகுதியை சுற்றியுள்ள மென்சதைகளின் திசுக்களை சமச்சீராக ஒழுங்குப்படுத்துதலும் செய்ய மிகவும் துணை புரிகிறது. இந்த அதிநவீன ஆர்த்அலைன் தொழில்நுட்பம் மூலம் செய்யப்படும் மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் வழக்கமான முறையில் இயந்திரங்கள் மற்றும் கணிணி துணை கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளை காட்டிலும் மிகவும் துல்லியமாக மூட்டுகளை சீரமைப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர் கூறுகையில், எலும்பு மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சையில் உபயோகப்படுத்தப்படும் மூட்டு செயற்கை உள்வைப்பின் (iஅpடயவெள) காலநீட்டிப்பும், சிறந்த செயல்பாடும் அது எவ்வாறு கச்சிதமாக நமது உடலிலுள்ள எலும்புகளுடன் ஒட்டி சீரமைந்துள்ளது என்பதை பொருத்துதான் அமையும். இந்த வகையில் ஆர்த்அலைன் பெரிதும் உறுதுணையாக உள்ளது. இந்த ஆர்த்அலைன் உதவி கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சை முறைகள் மிகவும் கச்சிதமாக, துல்லியமான முறை மட்டுமல்ல, மிகவும் பாதுகாப்பான முறையும் கூட. இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யும்பொழுது, மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மற்ற முறைகளால் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களை விட குறைவான மருத்துவமனை உள்ளிருப்பு நாட்கள், குறைவான இரத்த இழப்பு போன்ற பயன்களை அடைவர். மேலும் சில நாட்கள் கழித்து மூட்டு பிரச்சனை ஏற்படுதல், அதன் காரணமாக மறு அறுவை சிகிச்சை பெறும் சாத்தியங்கள் போன்றவை, இந்த அறுவை சிகிச்சையில் மிகவும் குறைவு என்று இதன் பயன்களை விவரித்துக் கூறினார்.
மேலும், சர்வதேச மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சை (ஆர்த்தோபிளாஸ்டி) பத்திரிகையில் வெளியான பதிப்பு ஒன்றில், "இந்த ஆர்த்அலைன் முறையில் சிகிச்சை பெற்றவர்கள் 94.9 சதவீதம் துல்லியமான மூட்டு சீரமைப்பு அடைந்ததாகவும், இது மற்ற சிகிச்சை முறைகளை விட 2 சதவீதம் அதிக பயனளிக்க கூடியதாக அமைந்துள்ளதாகவும் வெளியிட்டுள்ளது என்று சான்றாக குறிப்பிட்டார்.
அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் மதுரை மண்டலம் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ரோகிணி ஸ்ரீதர் அவர்கள் பேசும்போது, மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை நவீன மருத்துவக் கருவிகளின் துணை கொண்டு பலருக்கு நலமான வாழ்வை வழங்கி வருகிறது. மதுரையில் இதுவரை அறிமுகப்படுத்தபடாததுமான ஒரு புதிய, எளிய சிகிச்சை முறையான ஆர்த்அலைன் சிகிச்சை முறையில் கற்றுத் தேர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமது, நோயாளிகளுக்கு பயன்பெறும் வகையில் இந்த அறுவை சிகிச்சைகளை முதன்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் செய்து அனைவருக்கும் பயன் அளித்துள்ளார் என்று குறிப்பிட்டார். தென்தமிழகத்திலேயே இந்த அறுவை சிகிச்சை முதன்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதாக பெருமிதமாக குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.