முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி (கல்லூரி சந்தை) மற்றும் விற்பனையினை மாவட்ட கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 5 ஜூலை 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்-விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) சார்பில் விருதுநகர்  வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி (கல்லூரி சந்தை) மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம்.    தொடங்கி வைத்தார்கள்.
 
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

மகளிர்  சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி (கல்லூரி சந்தை) மற்றும் விற்பனை 05.07.2017 முதல் 07.07.2017 முடிய 3 தினங்கள் விருதுநகர்  வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் விருதுநகர் மாவட்டம் உட்பட மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 மகளிர்  சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களான  ஆயத்த ஆடைகள், மண்பொருட்கள், சணல்நார்  பொருட்கள்,  கிறிஸ்டல் பொருட்கள், மெழுகுவர்த்தி, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொம்மைகள், மூலிகை பொருட்கள், கைவினைப் பொருட்கள், பேன்ஸி மற்றும்  உணவுப்பொருட்கள்; போன்றவை இடம் பெற்றிருந்தன. மேலும் கல்லூரி  சந்தையானது  மகளிர்  சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தில் இளைய  தலைமுறையின் பங்களிப்பை அதிகப்படுத்தவும்  நடத்தப்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் கைவினைப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் சிவகாசி காளீஸ்வரி மற்றும் எஸ்.எப்.ஆர் கல்லூரிகளிலும், தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், வி.பி.எம்.எம். பெண்கள்  கல்லூரியிலும் மகளிர்  சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி (கல்லூரி சந்தை) மற்றும்
 விற்பனை நடைபெறவுள்ளது.
மேலும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களிடம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்  தெரிவித்தார்கள்.

இக்கண்காட்சியின் துவக்க விழாவின்  போது திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்)   நா. சரவணன், உதவி திட்ட அலுவலர்(மகளிர் திட்டம்)   சு.பால்ராஜ், ச.முருகன்,  சோ.ந. அழகப்பன்,   இரா. பொன்னுகுமார் ஆகியோர்கள் மற்றும் விருதுநகர்  வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி புரவலர்  ஏ.ஏ.ஏ.மகேந்திரன், தலைவர்  மாணிக்கவாசகம், செயலாளர்  ரத்தினவேல், முதல்வர்  மீனாராணி, பேராசிரியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து