முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகர் போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்றார்

புதன்கிழமை, 12 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை மாநகர் புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நேற்று பதவியேற்று கொண்டார்.

மதுரை மாநகர் போலீஸ் கமிஷனராக இருந்த சைலேஷ்குமார் யாதவ் தென்மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டு பொறுப்பேற்று கொண்டார். இதனை தொடர்ந்து மதுரை மாநகர் புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று அழகர்கோவில் ரோட்டில் உள்ள மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய போலீஸ் கமிஷனராக முறைப்படி பதவியேற்று கொண்டார்.

புதிய போலீஸ் கமிஷனராக பதவியேற்று கொண்ட மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுரை மாநகரில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தப்படும். இந்த நல்லுறவினால் கிருமினல் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். கிருமினல் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரை மாநகர் அமைதியாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து