முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

புதன்கிழமை, 12 ஜூலை 2017      தேனி
Image Unavailable

  தேனி.-தேனி மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் இணைந்து தேனி பி.சி.கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், அனைவருக்கும் கல்வி இயக்கமும் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கமும் இணைந்து 2017-2018ம் கல்வியாண்டில், 6 முதல் 18 வயதுவரை உள்ள மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கான, மருத்துவ மதிப்பீட்டு முகாம்; 03.07.2017 முதல் 14.07.2017 வரை தேனி மாவட்டத்திலுள்ள தேனி, பெரியகுளம், கம்பம், ஆண்டிபட்டி, கடமலை-மயிலை, போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவ முகாம் நடத்திட உத்தரவிடப்பட்டு, 03.07.2017 முதல் (11.07.2014) இன்று வரை 7 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவ முகாம்கள் முடிவடைந்துள்ளது.
இம்முகாம்களில் மனநல மருத்துவர், கண் மருத்துவர், முடநீக்கியல் மருத்துவர் மற்றும் காது மூக்கு தொண்டை நிபுணர் போன்ற அரசு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத் திறன் உடைய குழந்தைகளை மதிப்பீடு செய்து, அக்குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள்;, தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை, பேரூந்து, ரயில் பயண கட்டண சலுகை, கல்வி உதவித்தொகை, போன்ற உதவிகள் தேவைப்படும் தகுதியுள்ள மாற்றுத் திறன் உடைய குழந்தைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற முகாம்களில் 760 குழந்தைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 162 குழந்தைகளுக்கு புதியதாக அடையாள அட்டை, 54 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கிடவும், 5 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்திடவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் 130 குழந்தைகள் கலந்து கொண்டனர். 22 குழந்தைகளுக்கு அடையாள அட்டை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது குழந்தைகளை (14.07.2017) அன்று உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இறுதி மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.
இம்முகாமில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  தி.வசந்தி  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்  வட்டாட்சியர்  ஷேக்அயூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து