முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு பக்தர்கள் ரூ.5.52 கோடி நன்கொடை

வியாழக்கிழமை, 13 ஜூலை 2017      ஆன்மிகம்
Image Unavailable

மும்பை, ஷீரடி  சாய்பாபா கோயிலுக்கு  பக்தர்கள் ரூ.5.52 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசாய்பாபா ஷன்ஸ்தான் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி ரூபால் அகர்வால் கூறியதாவது:

குரு பூர்ணிமா விழாவை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சாய்பாபா கோயிலுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிந்தனர். இவர்களில் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் பணமாக ரூ. 2.94 கோடியும், கோயிலில் உள்ள நன்கொடை வசூல் மையங்கள் மூலம் பணமாக ரூ.1.40 கோடியும் பெறப்பட்டது.

மேலும் ஆன்-லைன், டெபிட் கார்டு, காசோலை, வரைவோலை மூலமும் பக்தர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர். மொத்தம் ரூ.5.52 கோடி நன்கொடை கிடைத் துள்ளது. இது கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ. 1.40 கோடி அதிகம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து