முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்கோ குருப் மில் தொழிலாளர் குழந்தைகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சீனியர் பொது மேலாளர் நாகராஜன் வழங்கினார்

வியாழக்கிழமை, 13 ஜூலை 2017      விருதுநகர்
Image Unavailable

 ராஜபாளையம், -ராம்கோ குருப் மில்லில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்விக்கான உதவித்தொகையினை  மில்லின் சீனியர் பொது மேலாளர் நாகராஜன் வழங்கினார்.
ராம்கோ குருப் பஞ்சாலைகளின் பிரிவாவான ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான ‘இலவச கல்வி உதவித்தொகை’ வழங்கும் நிகழ்ச்சி கடந்த  8ம் தேதி அன்று மாலை 5.00 மணியளவில் மில்லில் உள்ள கேண்டீனில்  நடைபெற்றது. சுமார் 502 தொழிலாளர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் வந்து கலந்துகொண்டு தங்களுக்கான கல்வி உதவித்தொகை ரூபாய் 5,139,00- வரை பெற்றுச் சென்றனர். இவ்விழாவில்  மில்லின் சீனியர் பொது மேலாளர் - மனித வளம்  என். நாகராஜன் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
தொழிற்சங்கத்தின் சார்பாக  ஏஜடிசியூ  தலைவர்  பி.எம். ராமசாமி, எச்.எம்.எஸ். தலைவர்  ஆர். மாரிராஜ்,  ஐஎன்டியுசி  தலைவர் ஆர்.கண்ணன் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நடைபெற்ற  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராஜபாளையம் மில்லின் பிரசிடெண்ட்  எஸ்.காந்திமதிநாதன்  மற்றும் வைஸ் பிரசிடெண்ட் டெக்னிக்கல் வி.ராஜூ ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து