முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் மற்றும் பணிஉயர்வுக்கான ஆணைகள் ஆணையாளர் வழங்கினார்

வியாழக்கிழமை, 13 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு  பணிமாறுதல் மற்றும் பணிஉயர்வுக்கான ஆணைகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  வழங்கினார்.
 மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பணி உயர்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம் 10.07.2017 மற்றும் 11.07.2017 ஆகிய இரு நாட்களாக மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. 
 இக்கலந்தாய்வு கூட்டத்தில் 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் 4 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களும், 11 பட்டதாரி ஆசிரியர்களும், 1 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், 1 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், 1 இடைநிலை ஆசிரியர்களும் என மொத்தம்              18 ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் உத்தரவுகளையும், மேலும் 7 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், 6 பட்டதாரி ஆசிரியர்களும், 2 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், என மொத்தம் 15 ஆசிரியர்களுக்கு பணி உயர்வு உத்தரவுகளையும் என மொத்தம் 33 ஆசிரியர்களுக்கு ஆணையாளர் அவர்கள் இன்று (13.07.2017) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலர் திருமதி.சரஸ்வதி, மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், கல்விப்பிரிவு கண்காணிப்பாளர்கள் திரு.ரமேஷ், திரு.ராயப்பன் உட்பட மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கல்வி பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து