எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினியரிங் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து என்ஜினியரிங் கலந்தாய்வு 17-ம் தேதி தொடங்குகிறது.
ஐகோர்ட்டில் மனு
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்கத் தலைவர் முகம்மது ஜலீல். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு தொழில் கல்விகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டம் 2006-ன் படி சிறுபான்மை அல்லாத சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இந்த இடங்களில் ஒற்றை சாளர முறையின்படி நிரப்பப்படுகிறது.
காலியாக ...
2007-ம் ஆண்டு மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 784 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 94 ஆயிரத்து 346 இடங்களும், 2008-ம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 680 இடங்களில், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 565 இடங்களும், 2009-ம் ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 790 இடங்களும் மட்டுமே நிரப்பப்பட்டன.ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள என்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது மிகவும் குறைந்து விட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 2014-ம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் இடங்களும், 2015-ம் ஆண்டு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 83 இடங்களும், 2016-ம் ஆண்டு ஒரு லட்சத்து 18 ஆயிரம் இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டன.
22 கல்லூரிகள் மூட ...
சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்கள் பெரும் பகுதி இடங்களை அரசிடம் கலந்தாய்வுக்காக ஒப்படைக்கின்றன. ஆனால் கலந்தாய்வு முடிந்து நிரப்பப்படாத இடங்கள் கடைசி நேரத்தில் அந்த கல்லூரிகளுக்கு திருப்பி ஒப்படைக்கப்படுவதால், அவற்றை கல்லூரி நிர்வாகத்தாலும் நிரப்ப முடிவதில்லை. இதனால் தனியார் சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. அனுமதிக்கப்பட்ட இடங்களை நிரப்ப முடியவில்லை. வருவாய் குறைவதால், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இந்தாண்டு மட்டும் 22 என்ஜினியரிங் கல்லூரிகள் மூட விண்ணப்பித்துள்ளன.
தடை விதிக்க ...
நடப்பு கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவுள்ள கலந்தாய்வில் சுமார் 60 சதவீத இடங்கள், அதாவது ஒரு லட்சத்துக்கும் மேலான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள், தங்களது கல்லூரிகளில் உள்ள இடங்களை அவர்களே நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அல்லது சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களின், அரசுக்கு வழங்கும் இடங்களின் சதவீதத்தை மாற்றியமைக்க வேண்டும். இதுகுறித்து தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு கடந்த 7-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பியும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என்ஜினியரிங் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் வரும் 27-ந் தேதி நடத்தும் கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும். என் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோரிக்கை நிராகரிப்பு
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி, கலந்தாய்வு இல்லாமல் அரசு ஒதுக்கீட்டு இடத்தை கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளேன்’ என்றார். அதற்கு நீதிபதி, என்ஜினியரிங் படிப்புக்கு கலந்தாய்வு கண்டிப்பாக நடத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. என்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்கவும் முடியாது’ என்றார். அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி, ‘ஏற்கனவே அரசுக்கு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீத இடங்களை வழங்குவதை கல்லூரி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டது. தற்போது அந்த இடங்களை எல்லாம் திருப்பிக் கேட்க முடியாது’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாததத்தையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
கலந்தாய்வு 17-ல் தொடக்கம்
இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜூலை 17-ம் தேதியிலிருந்து என்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும். இந்தக் கலந்தாய்வு இணையம் மூலமாக நடத்தப்படும். இக் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறும். ஜூலை 19, 20 ஆகிய நாட்களில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கும். இந்த கல்வியாண்டில் என்ஜினியரிங் படிப்பில் சேர 1.47 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.