எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தாது மணல் குறித்த வழக்கில் அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் பேடி குழுவின் அறிக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவிற்கேற்ப இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நடவடிக்கை என்ன ?
தமிழக சட்டசபையில் கேள்விநேரம் முடிந்த பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்., தூத்துக்குடி, மதுரை, மாவட்டங்களில் தாது மணல் வெட்டியெடுப்பது குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங்பேடி தலைமையில் ஒரு குழு அமைத்தார்கள். 2013-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த குழுவின் அறிக்கை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. 4 வருடமாகியும் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. நான்கு வருடமாகியும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதுப்பற்றி கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்னும் அப்படிப்பட்ட கொள்கை முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
நீட்டிப்பு உத்தரவு
அவரது கவன ஈர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் தாது மணல் அனுமதியின்றி வெட்டியெடுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அரசு 2013-ம் ஆண்டிலேயே ககன்தீப் சிங் பேடி, தலைமையில் சிறப்பு குழு அமைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனிம சுரங்க குத்தகை பகுதிகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஆணையிட்டது. பின்னர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் இச்சிறப்புக் குழுவே ஆய்வு செய்ய நீட்டிப்பு உத்தரவு வழங்கப்பட்டது.
ஆய்வறிக்கை தாக்கல்
அதனை தொடர்ந்து தாது மணல் வெட்டியெடுப்பது கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 2013-ம் ஆண்டு முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் அரசினால் தடை செய்யப்பட்டு நடை சீட்டு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ககன்தீப் சிங் பேடி, ஆய்வறிக்கை பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு செப்டம்பர் 4-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
ஆய்வு நடந்து வருகிறது
உயர்நீதிமன்றத்தில் தாதுமணல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தின் ஆலோசகராக ஏ.சுரேஷ் 2016-ல் நியமிக்கப்பட்டார். மேற்படி தாதுமணல் தொடர்பான ஒரு பொது நல வழக்கின் விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றம் அரசு செயலர் அந்தஸ்தில் சத்தியப்ரதா சாகு, தலைமையில் குழு அமைத்து அதில் மத்திய அரசை சார்ந்த இந்திய அணுசக்தி துறை, ஐ.பி.எம், சுங்கம் மற்றும் கலால் துறை அலுவலர்களுடன் கனிமம் மற்றும் சுரங்கத் துறை, வருவாய்த் துறை, நிலஅளவை ஆகிய துறைகள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு, தற்சமயம் கடற்கரை மாவட்டங்களில் தாது மணல் மற்றும் அணுசக்தி கனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், இந்த ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
மேற்படி, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசு தன்னுடைய 23.5.2017 தேதிய கடிதத்தில் மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசை சார்ந்த பாஸ்கராச்சாரியா செயற்கைகோள் விண்வெளி பயன்பாடு மற்றும் புவி தகவல் ஆய்வு அமைப்பின் உதவியுடன் கடற்கரை மாவட்டங்களில் உள்ள தாது மணல் படிவு பகுதிகள் முழுவதும் செயற்கைகோள் மூலம் கண்காணித்து அறிக்கை தரகோரியுள்ளது.
கண்காணிப்பு பணி
உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், கடற்கரை மாவட்டங்களில் தாது மணல் வெட்டியெடுப்பது அரசினால் தடை செய்யப்பட்டப் பின்பும், அனுமதியின்றி தாதுமணல் வெட்டியெடுக்கப்படுவதாக நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டதால், நீதிமன்ற ஆணையின்படி தாதுமணல் வெட்டியெடுப்பதை முழுவதும் தடுக்கும் நோக்கிலும், வாகனங்களை தணிக்கை செய்யவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் மாவட்டத்தில் பணிபுரியும் துணை ஆட்சியர், காவல்துறை, கனிமவளத்துறை, நிலஅளவை துறை மற்றும் இதர துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை அமைக்க அரசினால் அறிவுறுத்தப்பட்டு, உரியகண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆலோசகர் ஏ.சுரேஷ் தனது அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். மேலும், இவ்வழக்குகளில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.