எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்காவில் அமைந்துள்ளது. இத்திருத்தலமானது நாமக்கல்லிலிருந்து சுமார் 31 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் 500 வருடங்கள் பழமைவாய்ந்தது. இத்திருத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், உற்சவர் சோமாஸ்கந்தர், அம்மன் தாயார் அறம் வளர்த்த நாயகி ஆவார். மேலும் இத்தல பெருமைகள் பற்றி அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார். இத்தலத்தில் நெல்லி விருட்சமரமாக உள்ளது.
இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் லிங்கத்தின் மேல் அம்பு பட்ட தலும்பு ஒன்று இருப்பது சிறம்பம்சமாகும். இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டதாக விளங்குகிறது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையை தலைநகரமாகக் கொண்டு வல்வில் ஒரி என்னும் மன்னன் இராசிபுரம் பகுதிகளையும் ஆட்சி செய்து கொண்டு வந்தான். வல்வில் ஒரி ஒரு சிவபக்தன். வில்வித்தையிலும் சிறந்த வீரம். இராசிபுரம் பகுதியில் வேட்டைக்கு வந்த மன்னனுக்கு வனத்தில் ஒரு மிருகம் கூட கண்ணுக்கு தென்படவில்லை. அலைந்து சோர்ந்து போன நேரத்தில் ஓரிடத்தில் வென்பன்றி ஒன்றைக் கண்டான். உடனே அப்பன்றியை தூரத்திக் கொண்டு அதன் மீது அம்பை எய்தான். எய்த அம்பு பன்றியின் மேல் தாக்கியும் பன்றி நிற்காமல் ஓடியது. மன்னன் பன்றியை வெகுதூரம் பின் தொடர்ந்தான். நீண்டதூரம் ஓடி பன்றி ஓரிடத்தில் ஒரு புதருக்குள் ஓடி மறைந்து விட்டது. மன்னன் புதரை விலக்கி பார்த்தபோது அவ்விடத்தில் சுயம்புலிங்கமாக தோன்றிய ஒரு லிங்கத்தைக் கண்டான். மன்னன் எய்த அம்பு பட்டு லிங்கத்தின் நெற்றியில் ரத்தம் வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு கலங்கிய மன்னன் சிவனை வணங்கினான். மன்னனுக்கு சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டி தானே பன்றியாக வந்ததை உணர்த்தினார். உடனே மன்னன் சுயம்புலிங்கம் தோன்றிய இடத்திலேயே சிவபெருமானுக்கு கோவில் எழுப்பத் தொடங்கினான். வல்வில் ஒரி மன்னனுக்கு பிரகாரத்திலுள்ள வன்னி மரத்தடியில் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதில் மன்னன் வில், அம்பு மற்றும் இடுப்பில் கத்தியுடன் நின்ற கோலத்தில் வணங்கியபடி காட்சியளிக்கிறார். ஆடிப் பெருக்கன்று இக்கோவிலைக் கட்டிய வல்வில் ஒரி மன்னனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன. பொங்கல், சுண்டல், நைவேத்யம் செய்து விசேஷ பூஜைகளும் செய்யப்படுகின்றன.
இத்தல விநாயகர் சகட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்கிறார். கைலாசநாதர் தலத்தின் பிரகார வலத்தை முதலில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னதியும், பிரகாரத்தின் முடிவில்இராமேஸ்வரர், பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது. காசி, இராமேஸ்வரம் தலங்களில் எழுந்தருளும் சிவனை இத்தலத்தில் தரிசிக்கும் விதமாக விஸ்வநாதர் சன்னதி விமானம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் விசேஷமானதாகும்.
மேலும் இத்தலத்தில் அம்பாள் சன்னதி அருகில் முருகன் பாலதண்டாயுதபாணியாகவும், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியராகவும் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கிறார். இவ்வாறு இத்தலத்தில் முருகப்பெருமானின் இரண்டு கோலங்களையும் நாம் தரிசிக்கலாம்.
பொதுவாக சிவராத்திரியின் போது சிவனுக்கு இரவில் நான்கு கால பூஜைகள் நடப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் ஆறு கால பூஜைகள் செய்கின்றார்கள். அம்பாள் அறம் வளர்த்த நாயகி தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். நாயகிக்கு முன்புறம் மகாமேரு அமைந்துள்ளது. மேலும் ஹோமங்கள் நடைபெறுகின்றன. கோபுரத்திற்கு கீழே உள்ள விநாயகர் எதிரே நந்தியுடன் காட்சி தருவது விசேஷம். இவரை வணங்கிவிட்டே கோயி லுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். சிவன் கோஷ்டத்தில் சிவதுர்க்கையாக காட்சி தருகிறாள். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று சிவதுர்க்கைக்கு சங்காபிஷேகம் செய்யப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
தெட்சிணாமூர்த்திக்கு தனியே உற்சவர் இருக்கிறார். இவரது பீடத்திலேயே நான்கு சீடர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று இவர் தெட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஹோமங்கள் நடக்கின்றன. அந்நேரத்தில் இவரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை பிரசாதமாக தருகின்றார்கள்.
நாகருக்கு இத்தலத்தில் தனிச் சன்னதி உள்ளது. நாகதோஷமுள்ளவர்கள், தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமணத் தடையுள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு மஞ்சள் பூ, சர்க்கரைப் பொங்கல் படைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கையுள்ளது. காலபைரவர், சனீஸ்வரருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. கார்த்திகை முதல் நாளில் பைரவருக்கு, ஏகாதச ருத்ரபாராயணம் நடைபெறுகின்றது. 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடக்கிறது. மேலும் பஞ்சலிங்கம், கஜலெட்சுமி, சரஸ்வதி, நாயன்மார்கள், நால்வர், ஐயப்பன் மற்றும் சந்தான குறவர்களும் உள்ளனர்.
அறம் வளர்த்த நாயகி சன்னதியில் வளர்பிறை பிரதோஷத்தின் போது உச்சிக்காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு விசேஷ வழிபாடு நடக்கின்றது. அப்போது தேங்காய், பழம், அரிசி மற்றும் உப்பில்லாத சாதம் முதலானவற்றை நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றார்கள். இவ்வாறு செய்வதால் புத்திரப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.
இந்த கோவில் பிரகாரத்தில் கங்கை தீர்த்தம் தானாக தோன்றியதாக சொல்கிறார்கள். சிவஅம்சமான வீரபத்திரருக்கு சன்னதி மற்றும் இவருக்கு எதிரே நந்தி அமைந்துள்ளது. அருகில் ஒரே கல்லில் செய்யப்பட்ட புடைப்புச் சிற்பமாக சகட விநாயகர் இருக்கிறார். கையில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கும் இவரை வணங்கிட கல்வியில் சிறப்பிடலாம் என்பது நம்பிக்கை.
கைலாசநாதரிடம் வேண்டிக் கொண்டால் கலைகளில் சிறப்பிடம் பெறலாம். சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுகிறார்கள். சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசியில் விசாகம், தையில் தைப்பூசம், மாசியில் மாசிமகம், பங்குனியில் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இத்தலத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.