எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பால் உற்பத்தியாளர் சங்கங்களில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மருத்துவ நிலையங்கள்
சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நடப்பாண்டில், 49 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் 150 கால்நடை மருத்துவ நிலையங்கள் நபார்டு வங்கியின் நிதியுதவிடன் புதிதாகக் கட்டப்படும். நடப்பாண்டில், 93.86 லட்சம் கால்நடைகளுக்கு நோய்த் தொற்றுகளை தடுக்கும் வகையில் 18 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பூசிகள் போடப்படும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ்கோடு வெளியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி உள்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்குடன் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வுக் கூடங்கள் 14 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும்.
உட்கட்டமைப்பு வசதிகள்
உற்பத்தியாளர்களிடமிருந்து கூடுதலாக பெறப்படும் பாலை கையாள திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், வேலூர், காஞ்சிபுரம் - திருவள்ளூர், விருதுநகர், தருமபுரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் குளிர்பதன வசதி, நவீன பாலகம் அமைத்தல், பால் பதப்படுத்தும் இயந்திரங்கள் நிறுவுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மேம்படுத்துதல், தீவனக் கிடங்குகள், நெய் நிரப்பும் இயந்திரங்கள், தரக்கட்டுப்பாடு ஆய்வகம், பால் பை நிரப்பும் இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
20,000 பணியாளர்களுக்கு ...
தமிழகத்தில் கிராம அளவில் சுமார் 12,000 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கிராம அளவில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால்கொள்முதல் செய்யும் பணியுடன், பால் தரப் பரிசோதனை செய்தல், கால்நடை தீவனம் வழங்குதல் போன்ற இதர பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 20,000 பணியாளர்களுக்கு, அச்சங்கங்களின் பால் உற்பத்தி மற்றும் அவை ஈட்டும் இலாபம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவர்களது ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறுவைத்த கோரிக்கையை பரிசீலனை செய்து, அவர்களது பணிமூப்பு அடிப்படையில், அனைத்து முதுநிலை பணியாளர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், மாற்று ஏற்பாடாக பணப்பயன்பெறும் மாற்றுத் திட்டத்தை அரசு பரிசீலித்து வருகிறது.
ஊதிய உயர்வு
தொடக்க பால் உற்பத்தியாளர்கள்சங்கங்களின் 20,000 பணியாளர்கள் உடனடியாக பயன் பெறும் வகையில், அவர்களுக்குமாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். இதற்கான 5 கோடி ரூபாய் செலவினம் சங்க நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். 2012-ம் ஆண்டில் நாகப்பட்டினத்தில் இந்தியாவிலேயே முதலாவது மீன்வளப் பல்கலைக்கழகத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். தற்போது, மீன்வளப்பிரிவில் தேவைப்படும் மனிதவளத் தேவையினைபூர்த்தி செய்திடும் வகையில் நடப்பாண்டில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு பேரூராட்சியில் அமைந்துள்ள ஓரடியம்புலம் கிராமத்தில் ஒரு புதிய மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் துவக்கப்படும். தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தின்கீழ் நிறுவப்படும் இந்த புதிய மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடப்பாண்டிலிருந்து 20 மாணவர்கள் மீன்வள இளநிலை பட்டப்படிப்பிற்கு சேர்க்கப்படுவார்கள்.
மீன்வள ஆராய்ச்சி நிலையம்
இந்த மீன்வளக் கல்லூரிக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் 15 ஏக்கர்பரப்பிலும், 50 ஏக்கர் பரப்பளவில் நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்பண்ணைகளும் அமைக்கப்படும். இந்த மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினை அமைப்பதற்கு 28 கோடியே 82 லட்சம் ரூபாய் முதற்கட்டமாக வழங்கப்படும். சென்னை, இராயபுரத்தில் ஒரு மீன்வளப் பயிற்சி நிலையமும், மீன்வளர்ப்புத் தொழில்நுட்பங்களில் பல்வேறு பயிற்சிகள் வழங்க காஞ்சிபுரம் மாவட்டம் முட்டுக்காட்டிலுள்ள மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்சி மையமும் 13 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
முதுகலைப் பட்டப்படிப்பு
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின், சென்னையிலுள்ள வாணியஞ்சாவடி முதுகலை பட்ட மேற்படிப்பு வளாகத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக ‘மீன்வள வணிக மேலாண்மை’ முதுகலைப் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் 40 மாணவர்கள் நடப்பாண்டிலிருந்து சேர்க்கப்படுவார்கள். மேலும், மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன்,கடல்சார் உயிர் தொழில்நுட்ப முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு 12 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவை தவிர, இந்தியாவிலேயே முதன்முதலாக ‘மீன்வள மருந்தியலில்’ முதுகலைப் பட்டப்படிப்பும் தொடங்கப்படும். இந்த நிலையத்தில் நவீன நூலகம் , அதி நவீன ஆய்வுக்கூடங்கள் மற்றும் ஆராய்ச்சியினை மேற்கொள்ள உயிரணு மரபியல், மூலக்கூறு உயிரியல், மரபுசங்கிலி தொடர் வேதிவினை, நொதியியல், நுண்ணுயிரியல் மற்றும் உயிர்-வேதியியல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். இந்த மீன்வள முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான கூடுதல் கல்விக் கூட வசதிகள் 6 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.