எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திருப்பூர் குமரன், பூலித்தேவன் உள்ளிட்ட 30 தலைவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு விழா கொண்டாடப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.
அரசு விழாக்கள்
செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானியகோரிக்கையின் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: -
தமிழ்ச்சான்றோர்கள், விடுதலைப்போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்களில் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழக அரசின் ஆண்டு தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா கொண்டப்படும் வகையில், தமிழகத்தில் 64 மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சென்னையில் 27 தலைவர்களுக்கும், பிற மாவட்டங்களில் 30 தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டு தோறும் பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலும் கொண்டாடப்படுகிறது. கொடிக்காத்த குமரன் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அவரின் பிறந்தநாள் விழா தொடரும் செலவினமாக ரூ.25 ஆயிரம் செலவில் அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படும். விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செவலில் தொடரும் செலவினமாக ரூ.25 ஆயிரம் செலவில் அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படும்.
குறும்படம் தயாரிக்க ...
எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் பயிற்சி மற்றும் குறும்படம் தயாரிக்க ஆண்டுதோறும் வெளிமுகமை மூலம் நவீன தொழில்நுட்பக் கருவிகள் பெற்றிட ரூ.75 லட்சத்திலிருந்து ரூ. 1.50 கோடியாக நிதி உயர்த்தி வழங்கப்படும். எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் ஆண்டு தோறும் குறும்படம் தயாரிப்பதற்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு திரைப்படப் பிரிவு கட்டடம் ரூ.55 லட்சத்தில் புதுப்பிக்கப்படும். அரசு பொருட்காட்சி நடைபெறுவதை கிராம அளவில் விளம்பரப்படுத்த மின்னணுத் திரையுடன் கூடிய விளம்பர வாகனம் ரூ.10.50 லட்சம் செலவில் வாங்கப்படும். இதற்காக ஓட்டுனர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் வாகனசீராளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். தமிழரசு இதழ்களுக்கான ஆண்டு மற்றும் ஆயுள் சந்தா விவரங்களை பதிவு செய்ய நவீன மென்பொருள் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
சிற்றுண்டிப்படி உயர்வு
அனைத்து துறைகளின் நிலைப்படுத்தப்பட்ட படிவங்களை அச்சடிக்க தேவையான அச்சு தகடுகளைத் தயாரிக்க புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்திற்கு பிளேட் எக்ஸ்போசர் இயந்திரம் ரூ.3,25.000 செலவில் கொள்முதல் செய்யப்படும். மாவட்ட அரசிதழ்கள் அச்சிட திருச்சி அரசு கிளை அச்சகத்திற்கு சிறிய கல்லச்சு இயந்திரமும், அச்சடிக்கப்பட்ட காகிதங்களை எடுத்துச் செல்ல நீரழுத்த விசைத் தள்ளுவண்டியும் ரூ.8 லட்சத்து 27 ஆயிரம் செலவில் கொள்முதல் செய்யப்படும். மாவட்ட அரசிதழ்கள் அச்சிட புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்திற்கு சிறிய கல்லச்சு இயந்திரம் ரூ.8 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும். வலை கல்லச்சுமப் பொறியில் எண்ணிடும் பணியினை மேற்கொள்ள,மதுரை,சேலம் அரசு கிளை அச்சகத்திற்கு எண்மிய முறையில் எண்ணிடும் இயந்திரம் தலா 16 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கொள்முதல் செய்யப்படும். அரசு அச்சகங்களில் பணிபுரியும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிற்றுண்டிப்படி 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அரசு அச்சகங்களில் பணிபுரியும் பெண் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இரு மேலங்கிகளுக்கான தையல்கூலி தொகை 350 ரூபாயில் இருந்து 700 ரூபாயாகவும், ஆண் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 ஜோடிகளுக்கான தையல்கூலித் தொகை 800 ரூபாயில் இருந்து 1200 ருபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.