எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திருப்பூர் குமரன், பூலித்தேவன் உள்ளிட்ட 30 தலைவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு விழா கொண்டாடப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.
அரசு விழாக்கள்
செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானியகோரிக்கையின் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: -
தமிழ்ச்சான்றோர்கள், விடுதலைப்போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்களில் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழக அரசின் ஆண்டு தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா கொண்டப்படும் வகையில், தமிழகத்தில் 64 மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சென்னையில் 27 தலைவர்களுக்கும், பிற மாவட்டங்களில் 30 தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டு தோறும் பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலும் கொண்டாடப்படுகிறது. கொடிக்காத்த குமரன் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அவரின் பிறந்தநாள் விழா தொடரும் செலவினமாக ரூ.25 ஆயிரம் செலவில் அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படும். விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செவலில் தொடரும் செலவினமாக ரூ.25 ஆயிரம் செலவில் அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படும்.
குறும்படம் தயாரிக்க ...
எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் பயிற்சி மற்றும் குறும்படம் தயாரிக்க ஆண்டுதோறும் வெளிமுகமை மூலம் நவீன தொழில்நுட்பக் கருவிகள் பெற்றிட ரூ.75 லட்சத்திலிருந்து ரூ. 1.50 கோடியாக நிதி உயர்த்தி வழங்கப்படும். எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் ஆண்டு தோறும் குறும்படம் தயாரிப்பதற்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு திரைப்படப் பிரிவு கட்டடம் ரூ.55 லட்சத்தில் புதுப்பிக்கப்படும். அரசு பொருட்காட்சி நடைபெறுவதை கிராம அளவில் விளம்பரப்படுத்த மின்னணுத் திரையுடன் கூடிய விளம்பர வாகனம் ரூ.10.50 லட்சம் செலவில் வாங்கப்படும். இதற்காக ஓட்டுனர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் வாகனசீராளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். தமிழரசு இதழ்களுக்கான ஆண்டு மற்றும் ஆயுள் சந்தா விவரங்களை பதிவு செய்ய நவீன மென்பொருள் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
சிற்றுண்டிப்படி உயர்வு
அனைத்து துறைகளின் நிலைப்படுத்தப்பட்ட படிவங்களை அச்சடிக்க தேவையான அச்சு தகடுகளைத் தயாரிக்க புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்திற்கு பிளேட் எக்ஸ்போசர் இயந்திரம் ரூ.3,25.000 செலவில் கொள்முதல் செய்யப்படும். மாவட்ட அரசிதழ்கள் அச்சிட திருச்சி அரசு கிளை அச்சகத்திற்கு சிறிய கல்லச்சு இயந்திரமும், அச்சடிக்கப்பட்ட காகிதங்களை எடுத்துச் செல்ல நீரழுத்த விசைத் தள்ளுவண்டியும் ரூ.8 லட்சத்து 27 ஆயிரம் செலவில் கொள்முதல் செய்யப்படும். மாவட்ட அரசிதழ்கள் அச்சிட புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்திற்கு சிறிய கல்லச்சு இயந்திரம் ரூ.8 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும். வலை கல்லச்சுமப் பொறியில் எண்ணிடும் பணியினை மேற்கொள்ள,மதுரை,சேலம் அரசு கிளை அச்சகத்திற்கு எண்மிய முறையில் எண்ணிடும் இயந்திரம் தலா 16 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கொள்முதல் செய்யப்படும். அரசு அச்சகங்களில் பணிபுரியும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிற்றுண்டிப்படி 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அரசு அச்சகங்களில் பணிபுரியும் பெண் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இரு மேலங்கிகளுக்கான தையல்கூலி தொகை 350 ரூபாயில் இருந்து 700 ரூபாயாகவும், ஆண் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 ஜோடிகளுக்கான தையல்கூலித் தொகை 800 ரூபாயில் இருந்து 1200 ருபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.