முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி - அழகர் கோயில் வரும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க ரூ.2.50 கோடியில் திட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மற்றும் மதுரை அழகர் கோயில் கள்ளழகர் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு புதிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக உறுப்பினர்கள் வசந்த் கார்த்திகேயன், அம்பேத்குமார், அதிமுக சார்பில் வெங்கடாசலம், பொன் சரஸ்வதி, ஆறுமுகம், காங்கிரஸ் சார்பில் விஜயதரணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: -

தண்டாயுதபாணி ...

பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குவருகை தரும் பக்தர்களின் குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் விதமாகதிருக்கோயில் நிதியிலிருந்து ரூ.15 கோடி மதிப்பீட்டில் சுமார் 9 கி.மீ. தொலைவிலுள்ளபாலாறு மற்றும் பொருந்தலாற்று படுகையில் நீரேற்றம் செய்து கொண்டு வரப்படும். இத்திபட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும்.

அழகர்கோவில் ...

மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலுக்கு வருகை தரும்பக்தர்களின் குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கு திருக்கோயிலிலிருந்து 5கி.மீ. தொலைவிலுள்ள கள்ளந்திரி கிராமத்தில் 4 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, திருக்கோயில் வளாகத்தில் 2 கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் 2 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படும். திருக்கோயில் நிதியிலிருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இத்திட்டம்செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து