முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு 7.5 கோடி சம்பளம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவிசாஸ்திரிக்கு சுமார் 7.5 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில்கும்ளே, சமீபத்தில் அப்பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய பயிற்சியாளர் பணிக்கு பலர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரவிசாஸ்திரியை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு செய்தது. அவருக்கு 7 முதல் ஏழரை கோடி ரூபாய் வரை ஆண்டு சம்பளம் வழங்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதேபோல் ரவிசாஸ்திரியுடன் இணைந்து பணியாற்றவுள்ள பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களுக்கு தலா 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கவும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து