எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஜனாதிபதி தேர்தலில் மாறி வாக்களிக்கவில்லை என்றும் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களித்திருப்பதாக கூறுவது வெறும் வதந்தி என்று தேசியவாத காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராம்நாத் கோவிந்த்தும் காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் இருக்கும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 185 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் 205 எம்.எல்.ஏ.க்கள் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களித்துள்ளதாகவும் அதாவது காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்றும் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 முதல் 15 எம்.எல்.ஏ.க்கள், தேசிய ஜனநாயக கூட்டணி முகாமை தொடர்பு கொண்டதாக சுயேட்சை எம்.எல்.ஏ. ரவி ராணா கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை தேசியவாத காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. நாங்கள் ஆரம்பம் முதலே மீராகுமாருக்கு ஆதரவாகத்தான் இருந்தோம். அவருக்கு ஆதரவு திரட்டினோம். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களோ, எம்.பி.க்களோ யாரும் ராம்நாத் கோவிந்த்துக்கு வாக்களிக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். அனைத்தும் வெறும் வதந்திகள்தான். இவைகளை ஒதுக்கித்தள்ளிவிட வேண்டும் என்றும் மாலிக் மேலும் கூறியுள்ளார்.
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாரதிய ஜனதாவுக்கு 122, அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு 63 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். காங்கிரசுக்கு 42, தேசியவாத காங்கிரசுக்கு 41 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். 7 சுயேட்சை உறுப்பினர்களும் மற்றும் இதர கட்சிகளின் உறுப்பினர்களும் உள்ளனர். மாநிலத்தில் 48 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் பாரதிய ஜனதாவுக்கு 23-ம் சிவசேனாவுக்கு 18, தேசியவாத காங்கிரசுக்கு 4, காங்கிரசுக்கு 2, சுயேட்சை உறுப்பினரும் ஒருவர் உள்ளார். மகாராஷ்டிரா மாநித்தில் மொத்தம் 19 ராஜ்யசபை உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 355 ஓட்டுக்கள் உள்ளன. இதில் 288 எம்.எல்.ஏ.க்கள் 48 லோக்சபை எம்.பி.க்கள், ராஜ்யசபை எம்.பி.க்கள் 19. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 248 ஓட்டுக்கள் உள்ளன. இதில் 199 எம்.எல்.ஏ.க்களும் 49 எம்.பி.க்களும் அடங்கும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சேர்த்து 104 ஓட்டுக்கள் உள்ளன. இதை வைத்துப்பார்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணியின் 248 ஓட்டுக்கள் மதிப்பானது 69ஆயிரத்து 517 ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஓட்டுக்கள் 104 ஆகும். இவைகளின் மதிப்பு 27 ஆயிரத்து 728.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.